Don't Miss!
- News இதுக்கு எதுக்கு தட்கலில் டிக்கெட் புக் பண்ண வேண்டும்? ஏசி 2ம் வகுப்பு பெட்டியிலேயே இதுதான் நிலைமை
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
யாருக்கும் பயப்பட மாட்டேன் - பா.ஜ.க-வினர் எதிர்ப்பு குறித்து விஷால் கருத்து!
Recommended Video
சென்னை : விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் நேற்று வெளியான 'இரும்புத்திரை' திரைப்படத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, ஆதார் திட்டங்களை கடுமையாக விமர்சித்திருந்தனர். ஆதார் தகவல்கள் பாதுகாப்பற்று இருப்பதாக படத்தில் காட்டப்பட்டது.
இதனால், இரும்புத்திரை படத்திற்கு பா.ஜ.க-வினர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இரும்புத்திரை படத்துக்கு எதிராக நேற்று சென்னை காசி தியேட்டரில் போராட்டம் நடைபெற்றது. விஷால் வீட்டை முற்றுகையிடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி விஷால் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஷால், "சமூகத்தில் நடந்துவரும் சமூக பிரச்னைகள், வரும்காலத்தில் சந்திக்கப்போகும் பிரச்னைகள் குறித்து படத்தில் பேசியுள்ளோம்.
யாருக்கும் ஆதரவாகவோ, திட்டமிட்டு விமர்சித்தோ படத்தில் கருத்து சொல்லப்படவில்லை. அதனால், நான் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. நான் சட்டத்தை மதிப்பவன். காவல்துறையை நம்புபவன். படத்திற்கு எதிரான எதிர்ப்புகள், போராட்டங்களை காவல்துறையினர் பார்த்துக்கொள்வார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.