Don't Miss!
- News வெள்ள பாதிப்பிலிருந்து மீளாத துபாய்.. இரண்டாவது நாளாக இன்றும் சென்னை டூ UAE விமானங்கள் ரத்து!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நடிகர் சங்க தேர்தல் ரத்து.. ஹைகோர்ட்டில் முறையீடு செய்தது பாண்டவர் அணி!
சென்னை: நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்தது தொடர்பாக பாண்டவர் அணியினர் சென்னை ஹைகோர்ட்டில் முறையீடு செய்துள்ளனர்.
நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் விஷாலின் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நடிகர் நாசரும், சங்கர்தாஸ் அணியின் சார்பில் பாக்யராஜ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
இதற்கான வாக்கு சேகரிப்பில் இரு அணியின் நிர்வாகிகளும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால் உறுப்பினர்கள் சேர்க்கை, மற்றும் பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக நடிகர் சங்க தேர்தலை மாவட்ட பதிவாளர் ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார்.
நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்ட விவகாரம் இரு அணி நிர்வாகிகளிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்தது தொடர்பாக விஷால் அணியினர் இன்று சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தனர்.
அப்போது சங்கங்களின் மாவட்ட பதிவாளரின் உத்தரவை ரத்து செய்ய அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக எடுக்க நீதிபதி ஆதிகேசவலு மறுப்பு தெரிவித்தார். மனுவாக தாக்கல் செய்தால் வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதி ஆதிகேசவலு தெரிவித்தார்.