Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அனைத்து முக்கிய பதவிகளையும் கைப்பற்றியது விஷால் அணி
சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் அனைத்து முக்கியப் பதவிகளையும் நடிகர் விஷால் அணி கைப்பற்றியுள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டுகளில் நிர்வாக பொறுப்பை வகிந்த கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் இன்று சென்னை அண்ணா நகரிலுள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் நடிகர் விஷால் தலைமையில் நம்ம அணி என்று உருவாக்கப்பட்டது. இந்த அணி இந்தத் தேர்தலில் அனைத்து முக்கியப் பதவிகளையும் கைப்பற்றியுள்ளது. இந்த அணியின் சார்பில் அணியின் சார்பில் இயக்குநர்கள் மிஷ்கின், பிரகாஷ்ஜ், கெளதம்வாசுதேவ்மேனன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
விஷால் அணியில் விஷால், ஞானவேல்ராஜ், மி்ஷ்கின், கதிரேசன், எஸ்.ஆர். பிரபு, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் ஆகியோர் வெறஅறி பெற்றனர். ஞானவேல்ராஜா, மிஷ்கின் ஆகியோர் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டனர். பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் ஆகியோர் துணைத் தலைவர்களாகத் தேர்வாயினர்.
எஸ்.ஆர். பிரபு, பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார். தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 27 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.