Don't Miss!
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஓட்டுப் பெட்டிக்கு பாதுகாப்பு வேணும்!- நடிகர் விஷால் போலீசில் புகார்
நடிகர் சங்கத் தேர்தலில் வாக்குப் பெட்டிக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி, சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் விஷால் அணியினர் மனு அளித்தனர்.
பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நடிகர் சங்கத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ளன.
சரத்குமார் அணியும் விஷால் அணியும் மும்முரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இப்போது தபால் ஓட்டுப் பதிவு நடக்கிறது. நாளை மறுதினத்துடன் தபால் ஓட்டு முடிகிறது. மொத்தம் 934 தபால் ஓட்டுகள் உள்ளன.
மீதி இருக்கும் உறுப்பினர்கள் நேரடியாக வந்து வாக்களிக்க உள்ளனர். இவர்களில் ரஜினி, கமலும் அடங்கும்.
வாக்குப் பதிவு முடிந்த அன்றே பெட்டிகளைத் திறந்து வாக்குகள் எண்ணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் வாக்குப் பதிவின்போதே, வாக்குப் பெட்டிகள் சேதமாகும் அல்லது களவாடப்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறி, வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கமிஷனர் அலுவலகத்தில் இன்று விஷால் அணியினர் புகார் அளித்துள்ளனர்.
விஷால், நாசர், பொன்வண்ணன், கருணாஸ் உள்ளிட்டோர் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகாரைத் தந்தனர்.