Don't Miss!
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
3 முறை கல்யாணம் பண்ணுவாராம், அந்த நடிகருடன் எப்படி வாழ்வது?: நடிகை குமுறல்
மும்பை: 3 முறை திருமணம் செய்வேன் என்று கூறும் ஒரு ஆளுடன் எப்படி வாழ்வது என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை மதுரிமா துலி.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் விஷால் ஆதித்யா சிங்கும், நடிகை மதுரிமா துலியும் காதலித்தனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள்.
இந்நிலையில் அவர்கள் சல்மான் கான் தயாரிக்கும் நாச் பால்யே 9 நடன ரியாலிட்டி ஷோவில் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க முன்னாள் காதல் ஜோடிகளை அழைத்து வந்து ஆட விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.
மதுரிமா
நாச் பால்யே 9 நிகழ்ச்சியின்போது விஷால் ஆதித்யா சிங் மற்றும் மதுரிமா இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விஷால் பற்றி மதுரிமா பேட்டி அளித்துள்ளார். விஷால் தனக்கு கோபமே வராது என்பது போன்று நடிக்கிறார். நானும் எவ்வளவு தான் பொறுத்துப் பொறுத்து போவது. தான் சொல்வது தான் சரி என்று நினைக்கிறார். யார் பேச்சையும் கேட்பது இல்லை. என்னுடன் இருக்க விரும்பினால் அவர் மாற வேண்டும்.
மன அழுத்தம்
நாச் பால்யே 9 நிகழ்ச்சியில் விஷால் நடந்து கொண்ட விதத்தை பார்த்தீர்கள் அல்லவா? இனியும் நான் பழசை எல்லாம் மறந்து அவருடன் சேர்ந்துவிடுவேன் என்று நினைக்கிறீர்களா?. வாய்ப்பே இல்லை. அப்படி நான் சேர்ந்தால் எனக்கு தான் மன அழுத்தம் ஏற்படும்.
சண்டை
நாங்கள் காதலித்தபோது நான் 3 முறை திருமணம் செய்யும் ஐடியாவில் உள்ளேன் என்று என்னிடமே கூறினார் விஷால். இதை எல்லாம் எப்படி பொறுத்துக்கொள்வது? ஒரு காதலியிடம் இப்படி சொல்லலாமா?. எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு அது பெரிதானது. நாங்கள் பொது இடங்களில் கூட சண்டை போடத துவங்கினோம். அதன் பிறகே பிரிந்துவிட்டோம்.
கெமிஸ்ட்ரி
நாச் பால்யே நிகழ்ச்சியில் நானும், விஷாலும் ஜெயிப்பது கஷ்டம். விஷால் ஒழுங்காக நடந்து கொண்டால் பார்க்கலாம். காதல் பாட்டுக்கு டான்ஸ் ஆடும்போது கெமிஸ்ட்ரி இருக்க வேண்டும். அது இல்லை என்றால் ஒன்றும் நடக்காது. எங்களுக்கு இடையே அந்த கெமிஸ்ட்ரி சுத்தமாக இல்லை. அவர் மாறினால் நல்லது என்கிறார் மதுரிமா.