Don't Miss!
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- News எம்பி சீட் கிடைக்காததால்தான் கணேசமூர்த்தி உயிரை விட்டாரா.. உண்மையல்ல.. வைகோ மறுப்பு
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- Technology பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.17,999 பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Automobiles எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
3 முறை கல்யாணம் பண்ணுவாராம், அந்த நடிகருடன் எப்படி வாழ்வது?: நடிகை குமுறல்
மும்பை: 3 முறை திருமணம் செய்வேன் என்று கூறும் ஒரு ஆளுடன் எப்படி வாழ்வது என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை மதுரிமா துலி.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் விஷால் ஆதித்யா சிங்கும், நடிகை மதுரிமா துலியும் காதலித்தனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள்.
இந்நிலையில் அவர்கள் சல்மான் கான் தயாரிக்கும் நாச் பால்யே 9 நடன ரியாலிட்டி ஷோவில் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க முன்னாள் காதல் ஜோடிகளை அழைத்து வந்து ஆட விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.
மதுரிமா
நாச் பால்யே 9 நிகழ்ச்சியின்போது விஷால் ஆதித்யா சிங் மற்றும் மதுரிமா இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விஷால் பற்றி மதுரிமா பேட்டி அளித்துள்ளார். விஷால் தனக்கு கோபமே வராது என்பது போன்று நடிக்கிறார். நானும் எவ்வளவு தான் பொறுத்துப் பொறுத்து போவது. தான் சொல்வது தான் சரி என்று நினைக்கிறார். யார் பேச்சையும் கேட்பது இல்லை. என்னுடன் இருக்க விரும்பினால் அவர் மாற வேண்டும்.
மன அழுத்தம்
நாச் பால்யே 9 நிகழ்ச்சியில் விஷால் நடந்து கொண்ட விதத்தை பார்த்தீர்கள் அல்லவா? இனியும் நான் பழசை எல்லாம் மறந்து அவருடன் சேர்ந்துவிடுவேன் என்று நினைக்கிறீர்களா?. வாய்ப்பே இல்லை. அப்படி நான் சேர்ந்தால் எனக்கு தான் மன அழுத்தம் ஏற்படும்.
சண்டை
நாங்கள் காதலித்தபோது நான் 3 முறை திருமணம் செய்யும் ஐடியாவில் உள்ளேன் என்று என்னிடமே கூறினார் விஷால். இதை எல்லாம் எப்படி பொறுத்துக்கொள்வது? ஒரு காதலியிடம் இப்படி சொல்லலாமா?. எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு அது பெரிதானது. நாங்கள் பொது இடங்களில் கூட சண்டை போடத துவங்கினோம். அதன் பிறகே பிரிந்துவிட்டோம்.
கெமிஸ்ட்ரி
நாச் பால்யே நிகழ்ச்சியில் நானும், விஷாலும் ஜெயிப்பது கஷ்டம். விஷால் ஒழுங்காக நடந்து கொண்டால் பார்க்கலாம். காதல் பாட்டுக்கு டான்ஸ் ஆடும்போது கெமிஸ்ட்ரி இருக்க வேண்டும். அது இல்லை என்றால் ஒன்றும் நடக்காது. எங்களுக்கு இடையே அந்த கெமிஸ்ட்ரி சுத்தமாக இல்லை. அவர் மாறினால் நல்லது என்கிறார் மதுரிமா.