Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோர்ட் உத்தரவுக்காக காத்திருக்கும் விஷால் திருமணம்.. ஜி.கே.ரெட்டி பேட்டியால் ரசிகர்கள் ஷாக்!
விஷாலின் திருமணம் பற்றி பேசியுள்ளார் அவரது அப்பா ஜி.கே.ரெட்டி.
Recommended Video
சென்னை: நடிகர் விஷாலின் திருமணம் எப்போது நடக்கும் என்பது பற்றி பேசியுள்ளார் அவரது அப்பா ஜி.கே.ரெட்டி.
நடிகர் விஷாலும், தெலுங்கு தொழிலதிபரின் மகளும் நடிகையுமான அனிஷா ரெட்டியும் காதலிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது அவர்களது திருமணம் அக்டோபரில் நடைபெறும் என தகவல்கள் வெளியானது.
ஆனால், திருமண வேலைகள் எதுவும் நடைபெற்வில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இதற்கிடையே அனிஷாவும் தங்களது நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கவும் இந்த பரபரப்பு அதிகமானது.
விஷால் திருமணம்
நடிகர் சங்கக் கட்டிடத்தில் வைத்து தான் திருமணம் செய்து கொள்வேன் என விஷால் அடம் பிடிப்பதாகவும், அதற்கு மணப்பெண் வீட்டில் சம்மதிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியானது. இதனால் அவர்களது திருமணம் பாதியிலேயே நின்று விட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இது தொடர்பாக இருதரப்பும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை.
விஷால் அப்பா பேட்டி
இந்நிலையில், தமயந்தி பட விழாவில் கலந்து கொண்ட விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி முதன்முறையாக விஷாலின் திருமணம் எப்போது என்பது பற்றி மௌனம் கலைத்துள்ளார். அதில் அவர், "விஷால் தன்னுடைய திருமணத்தை நடிகர் சங்கக் கட்டிடத்தில் வைத்து தான் நடத்துவேன் என உறுதியளித்துள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தல்
ஆனால், நடிகர் சங்கத் தேர்தல் முடிவடைந்தும் இன்னமும் அதில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் உள்ளன. நீதிமன்றம் உத்தரவிட்டால் தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். எப்போது வாக்குகள் எண்ணப்பட்டாலும் விஷால் அணி தான் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமேயில்லை.
பொறுமை தேவை
அப்படியாக மீண்டும் விஷால் அணி பதவியில் அமரும் போது, நடிகர் சங்க கட்டிட வேலைகள் முழுவதும் முடிக்கப்படும். அதன்பிறகு நடிகர் சங்க புதுக் கட்டிடத்தில் வைத்து விஷாலின் திருமணம் பார் போற்ற கோலாகலமாக நடைபெறும். அதுவரை கொஞ்சம் பொறுமை தேவை" என ஜி.கே.ரெட்டி கூறியிருக்கிறார்.