Don't Miss!
- News புதிய தலைமைச் செயலக முறைகேடு! அரசாணை ரத்து செய்ததை எதிர்த்த அப்பீல் மனு மீது இன்று தீர்ப்பு
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Finance ஆப்பிரிக்காவில் மாஸ்காட்டும் இந்திய நிறுவனங்கள்..TVS எங்க ஊர் பிராண்ட்-ன்னு சண்டை போடுறாங்கப்பா..!!
- Automobiles எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- Technology ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- Lifestyle 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நடிகர் சங்கத் தேர்தல்: மீண்டும் களமிறங்கும் விஷாலின் பாண்டவர் அணி.. ஒரு நடிகர் மட்டும் மிஸ்ஸிங்!
சென்னை: நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் 26 பேர் கொண்ட பட்டியலை விஷால் அணி வெளியிட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் 2019 முதல் 2022ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக முன்னின்று இத்தேர்தலை நடத்துகிறார்.
டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த தேர்தல் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமே தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அனைத்து நடிகர்களும் தேர்தலில் வாக்களிக்க வசதியாக, அன்றைய தினம் படப்பிடிப்புகளுக்கு விடுமுறை அளிக்க நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் மீண்டும் விஷாலின் பாண்டவர் அணி போட்டியிடுகிறது. இதற்காக 26 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்திக் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பூச்சி முருகன் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு குஷ்பு போட்டியிடுகிறார்.
இவர்களில் பெரும்பாலானோர் கடந்த தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.