Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இன்று நேற்று நாளைக்கு இரண்டாம் பாகத்துக்கு தயாராகும் விஷ்ணு!
ஓரளவு சுமாராக ஓடினாலே போதும், அந்தப் படத்துக்கு இரண்டாம் பாகம் என்று மார்தட்டும் காலம் இது.
விஷ்ணு நடித்து ஓரளவு நன்றாகவே ஓடிய இன்று நேற்று நாளை மட்டும் இதில் தப்பிக்குமா என்ன?
இந்தப் படத்துக்கும் இரண்டாம் பாகம் தயாராகப் போகிறது.
விஷ்ணு
விஷ்ணு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்'. இப்படத்தை விஷ்ணுவே தயாரித்துள்ளார். எழில் இயக்கியுள்ள இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.
டிரைலர்
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
ரசிகர்களிடம் கேள்வி
இந்நிலையில், விஷ்ணு விஷால் தான் நடித்த ‘முண்டாசுப்பட்டி', ‘ஜீவா', ‘இன்று நேற்று நாளை' ஆகிய படங்களில் எதில் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்று சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார்.
இன்று நேற்று நாளைக்குதான் ஓட்டு
இதில் பெரும்பாலான ரசிகர்கள் ‘இன்று நேற்று நாளை' படத்திற்கே அதிக ஆதரவை கொடுத்தனர். எனவே ‘இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் ஐடியாவில் இருக்கிறாராம் விஷ்ணு.