Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'என் பயம், வேதனைகள்..' சினிமாவில் 12 வருடம்.. நடிகர் விஷ்ணு விஷால் உருக்க அறிக்கை!
சென்னை: இந்த வருடம் அனைவருக்கும் கடினமானதாக அமைந்துவிட்டது என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
Recommended Video
சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடி குழு' படம் மூலம் ஹீரோவானவர், விஷ்ணு விஷால்.
இந்தப் படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியானது. இதில் சூரி, கிஷோர், சரண்யா மோகன் உட்பட பலர் நடித்திருந்தனர்.
தொடர்ந்து நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் உட்பட பல படங்களில் நடித்தார் விஷ்ணு விஷால்.
திடீர் விவாகரத்து
சில படங்களை தயாரித்தும் உள்ளார். இவர், பிரபல இயக்குனரும் நடிகருமான நட்ராஜின் மகள் ரஜனியை காதலித்து, கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறான். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.
ஜுவாலா கட்டா
இந்நிலையில், விஷ்ணு விஷாலும் பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இந்த வருடம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அவர் சினிமாவுக்கு வந்து 12 வருடம் ஆகிறது. இதையடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
12 வருடங்கள்
அதில் அவர் கூறியிருப்பதாவது: நம்பமுடியாத 12 வருடங்கள்! இந்தப் பயணம் முழுவதும் கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருந்தது. என்னுடைய பயம், வேதனை அனைத்தையும் கடந்து ஒவ்வொரு நாளும் புதிதாகக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்தப் பாதையில் என்னை ஆதரித்த ஒவ்வொருவருக்கும் நன்றி.
சிறந்த கதைகள்
ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு என் அன்பை அளிக்கிறேன். அடுத்து, காடன், எஃப்.ஐ.ஆர், மோகன் தாஸ், இன்று நேற்று நாளை 2, இயக்குநர் செல்லா, மற்றும் இயக்குநர் கோபிநாத்துடன் ஒரு படம் என பணிபுரிந்து வருகிறேன். இன்னும் சில சிறந்த கதைகள் மற்றும் இயக்குநர்களுடன் பணிபுரிய இருக்கிறேன்.
நீந்தி கொண்டிருப்போம்
கடந்த வருடம் அனைவருக்கும் கடினமானதாக அமைந்துவிட்டது. எனக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் வாழ்க்கை என்பது தொடர்ந்து முன்னேறிச் செல்வதுதான். தொடர்ந்து அலையோடோ அல்லது அதை எதிர்த்தோ நீந்தி கொண்டிருப்போம். இவ்வாறு கூறியுள்ளார்.