Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நேரடியாக ஒடிடியில் வெளியாகும் விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர்!
சென்னை : விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் திரைப்படம் ஒடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த படத்தில் கௌதம் மேனன், கௌரவ் நாராயணன், மஞ்சிமா மோகன் ,ரெபா மோனிகா ஜான், சைரா வில்சன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தீவிரவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார்.
அறிமுகம்
சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தின் வாயிலாக திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார் விஷ்ணு விஷால்
போலீஸ் அதிகாரியாக.
ஜீவா, இடம் பொருள் ஏவல், இன்று நேற்று நாளை போன்ற வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும், ராட்சசன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருந்தார் விஷ்ணு விஷால். கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.
தீவிரவாத கதை
மனு ஆனுந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்து வரும் படம் எஃப்.ஐ-ஆர். இப்படத்தில் விஷ்ணு விஷால் அபு பக்கர் அப்துல்லா என்ற கதாபாத்திரத்தில் ஒரு இஸ்லாமிய இளைஞராக நடித்துள்ளார். மேலும் கௌதம் மேனன் காவல்துறை உயர்அதிகாரியாக நடித்துள்ளார். தீவிரவாதத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார்.
ஒடிடியில் ரீலிஸ்
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தை நேரடியாக டிஜிட்டலில் வெளியிட விஷ்ணு விஷால் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ஒடிடிரீலிஸ் குறித்த தகவல் இன்னும் சில தினங்களில் உறுதியாகிவிடும் எனத் தெரிகிறது.