விஜய், சூர்யாவை இயக்குவேன்: சொல்கிறார் விஷ்ணுவர்தன்
சென்னை: விஜய் மற்றும் சூர்யாவை வைத்து படம் எடுப்பேன் என்று இயக்குனர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.
குறும்பு படம் மூலம் கோலிவுட்டுக்கு கிடைத்த இயக்குனர் விஷ்ணுவர்தன். அவர் இதுவரை 1 தெலுங்கு படம் உள்பட 6 படங்களை இயக்கியுள்ளார். அவர் அஜீத், நயன்தாரா, ஆர்யாவை வைத்து எடுத்த 7வது படமான ஆரம்பம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் விஷ்ணுவர்தன் தனது எதிர்கால படைப்புகள் குறித்து தெரிவித்துள்ளார்.

அஜீத், ஆர்யா சென்டிமென்ட்
விஷ்ணுவர்தன் இதுவரை இயக்கிய படங்களில் 2 படங்களில் அஜீத் குமார், 4 படங்களில் ஆர்யா நடித்துள்ளார். இதனால் விஷ்ணு அவர்களை மட்டும் தான் இயக்குவார் போன்று என்று கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது.

விஜய், சூர்யா
அஜீத், ஆர்யா சென்டிமென்ட்டை உடைத்து இனி வரும் காலங்களில் விஜய், சூர்யா உள்ளிட்டவர்களை வைத்து படம் எடுக்கப் போவதாக விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.

நண்பர்கள்
அஜீத்தும், ஆர்யாவும் புரபஷனல் நடிகர்கள் என்பதையும் தாண்டி தனது நல்ல நண்பர்கள் என்பதால் தான் அவர்களுடன் அடிக்கடி பணிபுரிவதாக விஷ்ணுவர்தன் கூறினார். அவர்களுக்குள் நல்ல புரிதலும் உள்ளதால் வேலை செய்வது ஈஸி என்றார் விஷ்ணு.

ஆரம்பம்
ஆரம்பம் படத்தின் இசை வெளியீடு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











