Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்!
விஸ்வாசம் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் திடீர் மரணமடைந்ததால் சோகம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் விஸ்வாசம் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் ரிலீசான நாள் முதல் நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் விஸ்வாசம் படம் சில காரணங்களால் சோகமான சம்பவங்களிலும் அடிபட்டு வருகிறது.
அஜித் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் பண்ண முயற்சித்த ரசிகர் பரிதாபமாக பலியானது, படம் பார்க்க காசு தராத தந்தையை மகனே எரித்தது, தியேட்டரில் சீட் பிரச்சினையில் கத்திக்குத்து நடந்தது என அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் அஜித் ரசிகர்கள் சோகமடைந்தனர்.
இந்நிலையில், விஸ்வாசம் ஓடும் தியேட்டர் ஒன்றில் மீண்டும் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள தியேட்டர் ஒன்றில் கோவையைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் நண்பர்களுடன் விஸ்வாசம் படம் பார்க்கச் சென்றுள்ளார்.
இடைவேளை வரை படத்தை ஜாலியாக விசில் அடித்துப் பார்த்த ராம்குமார், திடீரென வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். ஏற்கனவே அவர் மது அருந்தி இருந்ததால், போதையில் தான் மயங்கி விட்டார் என அவரது நண்பர்கள் நினைத்துள்ளனர். ஆனால் படம் முடிந்தும் அவர் எழவில்லை.
இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
விஸ்வாசம் படம் பார்க்க மகிழ்ச்சியாக வந்த நண்பர்கள், ராம்குமாரின் மரணத்தால் சோகமடைந்தனர்.