Don't Miss!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதிங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஏலே மரங்களை நடுங்க.. குளம் குட்டைகளை தூர் வாருங்க... விவேக் அழைப்பு!
சென்னை: நடிகர் விவேக் சென்னையில் குடி தண்ணீருக்காக மக்கள் படும் அவஸ்தைகளை காணொளி போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கார்.
விவேக் தனது ட்வீட்டர் வலைத் தளத்தில் மக்கள் தண்ணீருக்கா நீண்ட நெடும் வரிசையில் காலி குடங்களை போட்டு வைத்து காத்திருக்கும் காணொளியை பதிவிட்டு உள்ளார்.
அதோடு இந்த காணொளி சென்னையின் குடி நீர் தட்டுப்பாட்டை காட்டுகிறது. இந்த அவலம் தமிழ்நாடு முழுவதிலும் வர இருக்கும் அபாயம் ஒரே தீர்வு மரம் நடுதல்..ஏரி குளம் சீரமைத்தல் நீர் சிக்கனம். என்று பதிவிட்டு மாணவர் இளைஞர் கவனத்திற்கு என்றும் பதிவிட்டு இருக்கார்.
இந்த கானொளி சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டைக் காட்டுகிறது. இந்த அவலம் தமிழ்நாடு முழுதும் வர இருக்கும் அபாயம். ஒரே தீர்வு= மரம் நடுதல், ஏரி குளம் சீரமைத்தல், நீர் சிக்கனம்.#இளைஞர் மாணவர் கவனத்திற்கு pic.twitter.com/OTl3AcRCOd
— Vivekh actor (@Actor_Vivek) May 15, 2019
இவரை ஃபாலோ செய்யும் சங்கர் என்கிற ஒருவர் மகிழ்ச்சி அண்ணா என்று பதிவிட்டு ஆனாலும் இருக்கும் மரங்களை மின்சார துறை. போக்குவரத்து துறை வெட்டாமல் இருந்தாலே நகரங்களில் மரங்களில் எண்ணிக்கை குறைந்திருக்காதே...
மகிழ்ச்சி அண்ணா❤
— சங்கர் (@sankarGrs1987) May 15, 2019
ஆனாலும் இருக்கும் மரங்களை மின்சாரத்துறை போக்குவரத்து துறை வெட்டாமல் இருந்தாலே
நகரங்களில் மரங்களில் எண்ணிக்கை குறைந்திருக்காதே...
மாணவர்கள் இளைஞர் மட்டும் கவனித்தால் பத்தாது...#அரசும் கவனிக்க வேண்டும்...
(கேன் தண்ணீர் மட்டும் தடை இன்றி எப்படி கிடைக்குது??)
மாணவர்கள் இளைஞர்கள் கவனித்தால் மட்டும் போதாது... அரசும் கவனிக்க வேண்டும் என்று விவேக்கின் ட்வீட்டுக்கு பதில் பதிவு இட்டுள்ளார். இவர் கருத்திலும் உண்மை இருக்கத்தானே செய்யுது.
கிழக்கு வாசல்.. பரபரப்பு தூள் கிளப்புது.. வன்முறை, பகை பத்திகிட்டு எரியுது!
காவிரி டெல்டா பகுதிகளில் பல இடங்களில் ஆறு சீர் செய்யப்படாமல் உள்ளது. கர்நாடகாவில் எப்படியும் மழை பெய்யும்.தண்ணீர் போக வழியின்றி அவர்கள் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விட்டாக வேண்டும்.
இதை கருத்தில் கொண்டு காவிரி ஆற்றின் அத்தனை பகுதிகளையும் தூர் வார வேண்டும் சீர் செய்ய வேண்டும்.
நடிகர் விவேக்கின் விழிப்புணர்வு பல இளைஞர்களை.. கிராமங்களை சென்று அடைந்து பல விஷயங்களை அவர்கள் சீர் செய்து வருகிறார்கள் என்பது அவரது ஃபாலோயர்ஸ் பதில் ட்வீட்டில் புரிகிறது.