Don't Miss!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஏலே மரங்களை நடுங்க.. குளம் குட்டைகளை தூர் வாருங்க... விவேக் அழைப்பு!
சென்னை: நடிகர் விவேக் சென்னையில் குடி தண்ணீருக்காக மக்கள் படும் அவஸ்தைகளை காணொளி போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கார்.
விவேக் தனது ட்வீட்டர் வலைத் தளத்தில் மக்கள் தண்ணீருக்கா நீண்ட நெடும் வரிசையில் காலி குடங்களை போட்டு வைத்து காத்திருக்கும் காணொளியை பதிவிட்டு உள்ளார்.
அதோடு இந்த காணொளி சென்னையின் குடி நீர் தட்டுப்பாட்டை காட்டுகிறது. இந்த அவலம் தமிழ்நாடு முழுவதிலும் வர இருக்கும் அபாயம் ஒரே தீர்வு மரம் நடுதல்..ஏரி குளம் சீரமைத்தல் நீர் சிக்கனம். என்று பதிவிட்டு மாணவர் இளைஞர் கவனத்திற்கு என்றும் பதிவிட்டு இருக்கார்.
இந்த கானொளி சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டைக் காட்டுகிறது. இந்த அவலம் தமிழ்நாடு முழுதும் வர இருக்கும் அபாயம். ஒரே தீர்வு= மரம் நடுதல், ஏரி குளம் சீரமைத்தல், நீர் சிக்கனம்.#இளைஞர் மாணவர் கவனத்திற்கு pic.twitter.com/OTl3AcRCOd
— Vivekh actor (@Actor_Vivek) May 15, 2019
இவரை ஃபாலோ செய்யும் சங்கர் என்கிற ஒருவர் மகிழ்ச்சி அண்ணா என்று பதிவிட்டு ஆனாலும் இருக்கும் மரங்களை மின்சார துறை. போக்குவரத்து துறை வெட்டாமல் இருந்தாலே நகரங்களில் மரங்களில் எண்ணிக்கை குறைந்திருக்காதே...
மகிழ்ச்சி அண்ணா❤
— சங்கர் (@sankarGrs1987) May 15, 2019
ஆனாலும் இருக்கும் மரங்களை மின்சாரத்துறை போக்குவரத்து துறை வெட்டாமல் இருந்தாலே
நகரங்களில் மரங்களில் எண்ணிக்கை குறைந்திருக்காதே...
மாணவர்கள் இளைஞர் மட்டும் கவனித்தால் பத்தாது...#அரசும் கவனிக்க வேண்டும்...
(கேன் தண்ணீர் மட்டும் தடை இன்றி எப்படி கிடைக்குது??)
மாணவர்கள் இளைஞர்கள் கவனித்தால் மட்டும் போதாது... அரசும் கவனிக்க வேண்டும் என்று விவேக்கின் ட்வீட்டுக்கு பதில் பதிவு இட்டுள்ளார். இவர் கருத்திலும் உண்மை இருக்கத்தானே செய்யுது.
கிழக்கு வாசல்.. பரபரப்பு தூள் கிளப்புது.. வன்முறை, பகை பத்திகிட்டு எரியுது!
காவிரி டெல்டா பகுதிகளில் பல இடங்களில் ஆறு சீர் செய்யப்படாமல் உள்ளது. கர்நாடகாவில் எப்படியும் மழை பெய்யும்.தண்ணீர் போக வழியின்றி அவர்கள் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விட்டாக வேண்டும்.
இதை கருத்தில் கொண்டு காவிரி ஆற்றின் அத்தனை பகுதிகளையும் தூர் வார வேண்டும் சீர் செய்ய வேண்டும்.
நடிகர் விவேக்கின் விழிப்புணர்வு பல இளைஞர்களை.. கிராமங்களை சென்று அடைந்து பல விஷயங்களை அவர்கள் சீர் செய்து வருகிறார்கள் என்பது அவரது ஃபாலோயர்ஸ் பதில் ட்வீட்டில் புரிகிறது.