இந்த ஆண்களுக்கு தாய் குலங்கள் மேல் எவ்வளவு மதிப்பு பாருங்கள்...இதில் விவேக்கும்...!
சென்னை: நடிகர் விவேக் எந்த நேரத்திலும் தமது கடமையை மறப்பதாக இல்லை. அவர் நட்டு வைத்த மரக் கன்றுகள் இன்று வளர்ந்து விவேக்கின் புகழை மறைப்பதாகவும் இல்லை.
அக்னி வெயில் ஆரம்பிச்ச தினத்திலிருந்து இன்று வரை நீர், மோர், தர்பூசணி பந்தலமைத்து ஏழை பாழைகளுக்கு வழங்கியும் வருகிறார்.

தான் பெற்ற பிள்ளை வளர்ந்து நிற்பதைப் பார்த்து மகிழும் பெற்றோர் போல, தான் நட்டு வைத்த மரக்கன்று சிறு மரமாகி நிற்பதை போட்டோ எடுத்து அதை தனது ட்வீட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். அதில்...
2015 தன்னூர் அம்பாள் பள்ளியில் நட்ட மரக்கன்று இன்று ஒரு சிறு மரம்.2020 ல் நிழல் தரு, தரு(மரம்|) ஆகி விடும்.
ஜூன் 5 உலக சுற்று சூழல் தினம். இளைஞர், மாணவர்கள் இப்போது இருந்தே ஏற்பாடு செய்தால் அன்று மரக்கன்றுகள் நடலாம்.
இதில் அக்கா தங்கை தாய்மார்களை இணைத்துக் கொள்ள வேண்டும். நாம் நடும் கன்றை விட தாய்க்குலம் நடும் கன்று நன்கு வளரும் .என்று பதிவிட்டு உள்ளார்.


Click it and Unblock the Notifications











