Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
போதைப் பொருள் வழக்கு.. விசாரணைக்கு ஆஜராகவில்லை.. பிரபல நடிகர் மனைவிக்கு மீண்டும் சம்மன்!
மும்பை: போதைப் பொருள் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகாத பிரபல நடிகர் மனைவிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கன்னட சினிமா துறையில் போதை பொருள் விவகாரம் பரபரப்பாகி வருகிறது.
போதைப்பொருள் விற்பனை மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த காற்றும், மழையும்.. லடாக்கில் பைக் ஓட்டிய அனுபவம்.. 'மாஸ்டர்' ஹீரோயின் திரில்.. அமலா பால் ஆசை!
15 பேர் கைது
இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 15 பேரை போலீசார் கைது செய்யதுள்ளனர். இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். இந்த வழக்கில் மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர். இதன் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
தலைமறைவு ஆல்வா
இந்த விவகாரத்தில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வாவும் சம்மந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவர், போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததும் போலீசாருக்குத் தெரியவந்துள்ளது.
விவேக் ஓபராய்
அவரை கைது செய்ய போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். ஆதித்யா ஆல்வாவின் சகோதரி பிரியங்கா ஆல்வா, பிரபல நடிகர் விவேக் ஓபராயின் மனைவி. இவர், தமிழில் அஜித்தின் விவேகம் படத்தில் நடித்தவர். விவேக் ஓபராய் வீட்டில் ஆதித்யா பதுங்கி இருக்கலாம் என்பதால், மும்பையில் உள்ள அவரது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
பிரியங்கா ஆல்வா
அவர் அங்கு இல்லை. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் ஆதித்யாவை காப்பாற்ற விவேக் ஓபராய், அவர் மனைவி பிரியங்கா ஆல்வா முயன்றது தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி பிரியங்கா ஆல்வாவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
கால அவகாசம்
பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று மதியத்திற்குள் ஆஜராக, சம்மனில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. அவர், போலீசாரிடம் கால அவகாசம் எதுவும் கேட்கவில்லை. இதனால் அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.