Don't Miss!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Education தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!
- News ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு எவ்வளவு ? கடன் மட்டும் ரூ.649 கோடி.. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விவேக்கிற்கு இறுதிச்சடங்கு… தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் நன்றி !
சென்னை : நகைச்சுவை நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கை அரசு மரியாதையுடன் செய்த தமிழக அரசுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
Recommended Video
78 குண்டுகள் முழங்க காவல்துறையினரின் மரியாதையுடன் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது.
தாறுமாறாக லைக்ககளை அள்ளும் அமேரா தஸ்துரின் பிகினி ஃபோட்டோ
இதற்கு நன்றி தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தார்
நடிகர் விவேக்கிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு எக்மோ கருவி பொருத்தப்பட்டது. ஆனால் மருத்துவர்களின் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பலரும் அஞ்சலி செலுத்தினர்.
அரசு மரியாதை
விவேக்கின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மேட்டுக்குப்பம் மின் மாயானத்தில் 78 குண்டுகள் முழங்க காவல்துறையினரின் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு அவரது இளையமகள் தேஜஸ்வினி இறுதிச்சடங்குகளை செய்தார். இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அவருக்கு விடை கொடுத்தனர்.
தமிழக அரசுக்கு நன்றி
இந்நிலையில், விவேக் அவர்களின் கலை மற்றும் சமூக சேவைகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்ய அரசு ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கு நன்றி என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மனமார்ந்த நன்றி
அந்த அறிக்கையில், காலமான கலைமாமணி பத்மஸ்ரீ திரு.விவேக் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் கலை மற்றும் சமூக சேவைகளை கௌரவிக்கும் விதமாக காவல்துறையின் மரியாதையுடன் அன்னாரது இறுதிச்சடங்கு நடத்த ஆணையிட்ட தமிழக அரசுக்கு அனைத்து நடிகர்கள் மற்றும் நடிகைகள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.