ரஜினி சார் பேட்டியைப் பார்ப்பவர்கள் கண்கள் குளமாகிவிடும் - விவேக்
சென்னை: ஏப்ரல் 14 அன்று ஜெயாடிவியில் ரஜினி சாரின் பேட்டியைப் பார்ப்பவர் கண்கள் நிச்சயம் கலங்கிவிடும். அந்த அளவு நெகிழ்ச்சியான பேட்டியாக அது வந்துள்ளது என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஜெயா டிவிக்கு ரஜினிகாந்த் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

இந்தப் பேட்டியை எடுத்தவர் நடிகர் விவேக். அந்த அனுபவம் குறித்து விவேக் கூறுகையில், 'ரஜினி சாரின் தீவிர ரசிகன் நான். ஒரு சூப்பர் ஸ்டார் என்பதைத் தாண்டி அவரது மனிதநேயத்தை வெளிப்படுத்த ஒரு முயற்சியாக நினைத்து இந்த பேட்டியை எடுத்தேன்.
நிறைய விஷயங்களை இந்த பேட்டியின்போது அவர் பகிர்ந்து கொண்டார். தன் தனிப்பட்ட வாழ்க்கை.. குறிப்பாக தனது இறுதி காலம் பற்றியெல்லாம் கூட அவர் உணர்ச்சி வசப்பட்டுப் பேச, செட்டிலிருந்த அத்தனை பேரும் கலங்கிவிட்டார்கள்.
நான் நிச்சயம் சொல்வேன், அவரது இந்தப் பேட்டியைப் பார்க்கும் அத்தனை பேரின் கண்களும் குளமாகிவிடும்," என்றார்.


Click it and Unblock the Notifications











