Don't Miss!
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கடனே இருக்கக்கூடாது.. திருப்பிலாம் கொடுக்க வேண்டாம்.. செல் முருகனின் கடனை அடைத்த நடிகர் விவேக்!
சென்னை: தனது நண்பரும் மேலாளருமான செல் முருகனின் கடனை நடிகர் விவேக் அடைத்த தகவல் தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
நடிகர் விவேக்கிடம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேலாளராகவும் அவருடைய நெருங்கிய நண்பராகவும் பணியாற்றியவர் நடிகர் செல் முருகன்.
இந்தியன் 2 விவகாரம்.. லைகா நிறுவனத்திடம் இயக்குநர் ஷங்கர் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி!
ஆர்பிஜி செல் நிறுவனத்தில் பணியாற்றிய செல் முருகன் நடிகர் வையாபுரி மூலம் நடிகர் விவேக்கிற்கு அறிமுகமானார். தொடர்ந்து அவரிடம் மேலாளராக பணியாற்றிய அவருடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
தீவிர சிகிச்சை
இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
பெரும் அதிர்ச்சி
ஆனாலம் ஆபத்தான கட்டத்தில் இருந்த விவேக் கடந்த 17 ஆம் தேதி காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
யாரையும் தெரியாது
அவருடைய மறைவு தனிப்பட்ட விதத்தில் நடிகர் செல்முருகனுக்கு பேரிழப்பாக உள்ளது. இறுதிச் சடங்கிலேயே கதறி அழுதார் செல் முருகன். விவேக்குடன் எடுத்த வீடியோக்களையும் போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வரும் செல் முருகன் அவரை தவிர தனக்கு யாரையுமே தெரியாது என பதிவிட்டிருந்தார்.
கடனை அடைத்த விவேக்
மேலும் நடிகர் விவேக்குடன் எடுத்த வீடியோவை வெளியிட்ட செல் முருகன், ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என உருக்கமாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் விவேக் செல் முருகனின் கடனை அடைத்த தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பி தர வேண்டாம்
அதாவது செல் முருகன் கடன் நெருக்கடியில் இருந்தபோது நடிகர் விவேக் மொத்த பணத்தையும் கொடுத்து அவரது கடனை செட்டில் செய்துள்ளார். மேலும் கடன் இல்லாமல் வாழ வேண்டும் என்று கூறிய விவேக், தான் கடனை அடைத்த பணத்தை திருப்பி தர வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
பல தருணங்களில் உதவி
இதேபோல் பல தருணங்களில் நடிகர் விவேக், செல் முருகனுக்கு உதவி செய்துள்ளார். இதனாலேயே கடைசி வரை நடிகர் விவேக்கை விட்டு பிரியாமல் அவருடனே பயணித்து வந்துள்ளார் செல்முருகன்.