இப்போதைய தேவை 'ஒருவிரல் புரட்சி'... சர்கார் விழாவில் பாடலாசிரியர் விவேக்!
ஒருவிரல் புரட்சி தேவை என விவேக் தெரிவித்துள்ளார்
சென்னை: சர்கார் ஆடியோ லாஞ்ச்சில் ஒருவிரல் புரட்சியின் தேவையை விளக்கிய பாடலாசிரியர் விவேக்.
சர்கார் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய பாடலாசிரியர் விவேக், 25 வருடங்களாக உச்சியில் இருக்கும் மிகபெரிய ஆச்சர்யம் ஏஆர்.ரஹ்மான் என்று புகழ்ந்தார்.

விஜய்யைப் பற்றி பேசும்போது, ஜல்லிக்கட்டுகாக களத்தில் நின்றார், அனிதா வீட்டிற்குச் சென்று நம் மனதில் நின்றார். தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நேரில் சந்திக்கிறார். அவர் உங்களை தலைவராக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் எனக் கூறினார்.
ஒருவிரல் புரட்சி பாடல் எழுதியதற்கு ஒரு கதை சொன்னார். மூன்றுபேர் ஒரு படகில் செல்லும்போது கவிழ்ந்து தீவில் சிக்கிக்கொள்கிறது. அப்போது ஒரு தேவதை தோன்றி ஆளுக்கொரு வரம் தருவேன் எனச் சொல்கிறது. இரண்டுபேர், இந்தியாவில் மிகப்பெரிய தொழிலதிபராகவும், தமிழகத்தில் பெரிய ஆளாகவும் ஆக வேண்டுமென வரம் பெற்றுச் செல்கி ்றனர்.
மூன்றாவது நபர், அந்த தேவதையிடம் முன்பு சென்ற இரண்டு பேரும் திரும்பி வரவேண்டும் என்றானாம். அதுதான் உங்களிடம் இருக்கின்ற ஒரு விரல் புரட்சி. ஒருவிரல் புரட்சி காலத்தின் கட்டாயம் என்றார்.
மேலும், வெகு விரைவில் சிம்டாங்காரன் பாடலின் முழு அர்த்தத்தையும் வெளியிடுவேன். என உறுதியளித்தார்.


Click it and Unblock the Notifications











