Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தமிழக அரசுக்கு விவேக்கின் மனைவி கண்ணீர் மல்க நன்றி !
சென்னை : நகைச்சுவை நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கை அரசு மரியாதையுடன் செய்த தமிழக அரசுக்கு விவேக்கின் மனைவி அருட்செல்வி நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video
குடும்பத்தினருடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவல்துறைக்கும், அவரது ரசிகர்களுக்கும் இறுதிவரை உடன் இருந்த நடிகர், நடிகைகளுக்கும் நன்றி என கூறினார்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன்… விவேக்கின் மறைவுக்கு உருக்கமான இரங்கல் !
இதேபோல தென்னிந்திய நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தார்
நடிகர் விவேக்கிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு எக்மோ கருவி பொருத்தப்பட்டது. ஆனால் மருத்துவர்களின் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பலரும் அஞ்சலி செலுத்தினர்.
அரசு மரியாதை
விவேக்கின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மேட்டுக்குப்பம் மின் மாயானத்தில் 78 குண்டுகள் முழங்க காவல்துறையினரின் மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு அவரது இளையமகள் தேஜஸ்வினி இறுதிச்சடங்குகளை செய்தார். இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அவருக்கு விடை கொடுத்தனர்.
தமிழக அரசுக்கு நன்றி
இந்நிலையில் , குடும்பத்தினருடன் செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கின் மனைவி அருட்செல்வி, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்ய அரசு ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கு நன்றி என கூறினார். மேலும் பேசிய அவர், காவல் துறைக்கும், அவரது ரசிகர்களுக்கும், இறுதிச்சடங்குவரை உடன் இருந்து அனைத்து உதவிகளையும் செய்த அனைவருக்கும் மிகவும் நன்றி என கூறினார்.
மனமார்ந்த நன்றி
இதேபோல, தென்னிந்திய நடிகர் சங்கமும், காவல்துறையின் மரியாதையுடன் அன்னாரது இறுதிச்சடங்கு நடத்த ஆணையிட்ட தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர் சங்கமும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.