Don't Miss!
- Finance இனி ரீசார்ஜ் செலவு மிச்சம்தான் போங்க.. வாட்ஸ்அப்-இன் புதிய அப்டேட்.. செம!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? அணைந்த அடுப்பை பற்ற வைத்த காங். தலை? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகர்களை மிரட்ட வேண்டாம்: விவேக் சினிமா கலைஞர்களை அரசியல்வாதிகள் மிரட்டும் போக்கு நல்லதல்ல என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.நகைச்சுவை நடிகர் விவேக் சமீப காலமாக ஊர் ஊராகச் சென்று தனது ரசிகர்களை சந்திப்பது மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில்கலந்து கொள்வது, செல்லுகின்ற பகுதிகளில் நிருபர்களை வலுக்கட்டாயமாக அழைத்து பேட்டி கொடுப்பது என தனது டிராக்கைமாற்றிக் கொண்டு வருகிறார்.கடந்த ஒரு வாரத்தில் நெல்லை, மதுரை, திருச்சி உட்பட பல பகுதிகளுக்கு விசிட் அடித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட விவேக், செவ்வாய்க் கிழமை சேலத்திற்கு வந்தார்.அங்கும் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். விவேக் கூறுகையில்,காமெடி நடிகர்கள் ஹீரோவாக நிலைக்க முடியாது என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.ஏராளமான படங்களில் நடிகர் நாகேஷ் சிறப்பாக நடித்துள்ளார். கவுண்டமணி, செந்தில் காமெடிக்காகவே பல படங்கள் 100நாட்களைத் தாண்டி ஓடியுள்ளன. இதே போல நான் கதாநாயகனாக நடித்துள்ள சொல்லி அடிப்பேன் வந்த பிறகு பாருங்கள்.தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு மாற்றம் வரும்.சினிமாவில் சீர்திருத்தக் கருத்துக்களை கூறுவதால் நான் பெரியார் ஆகி விடமுடியாது. அவரைப் போல யாராலும் ஆக முடியாது.அவரைப் போல தாடி வேண்டுமானால் வளர்க்கலாம் என்று கூறிய அவரிடம், விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்துகேட்ட போது, சிறந்த இந்தியக் குடிமகன் விருது பெற்றுள்ள விஜயகாந்த் அரசியலுக்கு வருவதில் எந்தத் தவறும் இல்லை.அவர் அரசியலுக்கு வந்தால் சாதிப்பாரா என்பதே இப்போதைக்கு எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி. அதைப் பற்றி என்னாலும்இப்போது எதுவும் கூற முடியாது. அவர் முதலில் அரசியலில் கால் பதிக்கட்டும். பிறகு மற்றவற்றை பார்த்துக் கொள்ளலாம் என்றுநழுவிய விவேக், திடீரென ஆவேசம் வந்தவராக அரசியல்வாதிகளை ஒரு பிடிபிடித்தார்.தற்போது சினிமா கலைஞர்களை அரசியல்வாதிகள் தேவையில்லாமல் மிரட்டுவது ஒரு டிரெண்டாகி வருகிறது. இதற்கு என்னகாரணம் தெரியுமா? கலைஞர்களிடேயே ஒற்றுமை இல்லாதது தான்.சினிமாவில் புகை பிடிப்பது போல காட்சிகள் வரக்கூடாது என்று கூறுகிறார்கள். இந்த உத்தரவால் எத்தனை பேர் புகைபிடிப்பதை நிறுத்தி விடப்போகிறார்கள்? இது போன்ற தேவையில்லாமல் பிரச்சினையை ஏற்படுத்தாமல் நாட்டுக்குத்தேவையானவற்றை அரசியல்வாதிகள் செய்ய வேண்டும் என்றார் சூடாக.
சினிமா கலைஞர்களை அரசியல்வாதிகள் மிரட்டும் போக்கு நல்லதல்ல என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.
நகைச்சுவை நடிகர் விவேக் சமீப காலமாக ஊர் ஊராகச் சென்று தனது ரசிகர்களை சந்திப்பது மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில்கலந்து கொள்வது, செல்லுகின்ற பகுதிகளில் நிருபர்களை வலுக்கட்டாயமாக அழைத்து பேட்டி கொடுப்பது என தனது டிராக்கைமாற்றிக் கொண்டு வருகிறார்.
கடந்த ஒரு வாரத்தில் நெல்லை, மதுரை, திருச்சி உட்பட பல பகுதிகளுக்கு விசிட் அடித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட விவேக், செவ்வாய்க் கிழமை சேலத்திற்கு வந்தார்.
அங்கும் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். விவேக் கூறுகையில்,காமெடி நடிகர்கள் ஹீரோவாக நிலைக்க முடியாது என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
ஏராளமான படங்களில் நடிகர் நாகேஷ் சிறப்பாக நடித்துள்ளார். கவுண்டமணி, செந்தில் காமெடிக்காகவே பல படங்கள் 100நாட்களைத் தாண்டி ஓடியுள்ளன. இதே போல நான் கதாநாயகனாக நடித்துள்ள சொல்லி அடிப்பேன் வந்த பிறகு பாருங்கள்.தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு மாற்றம் வரும்.
சினிமாவில் சீர்திருத்தக் கருத்துக்களை கூறுவதால் நான் பெரியார் ஆகி விடமுடியாது. அவரைப் போல யாராலும் ஆக முடியாது.அவரைப் போல தாடி வேண்டுமானால் வளர்க்கலாம் என்று கூறிய அவரிடம், விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்துகேட்ட போது, சிறந்த இந்தியக் குடிமகன் விருது பெற்றுள்ள விஜயகாந்த் அரசியலுக்கு வருவதில் எந்தத் தவறும் இல்லை.
அவர் அரசியலுக்கு வந்தால் சாதிப்பாரா என்பதே இப்போதைக்கு எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி. அதைப் பற்றி என்னாலும்இப்போது எதுவும் கூற முடியாது. அவர் முதலில் அரசியலில் கால் பதிக்கட்டும். பிறகு மற்றவற்றை பார்த்துக் கொள்ளலாம் என்றுநழுவிய விவேக், திடீரென ஆவேசம் வந்தவராக அரசியல்வாதிகளை ஒரு பிடிபிடித்தார்.
தற்போது சினிமா கலைஞர்களை அரசியல்வாதிகள் தேவையில்லாமல் மிரட்டுவது ஒரு டிரெண்டாகி வருகிறது. இதற்கு என்னகாரணம் தெரியுமா? கலைஞர்களிடேயே ஒற்றுமை இல்லாதது தான்.
சினிமாவில் புகை பிடிப்பது போல காட்சிகள் வரக்கூடாது என்று கூறுகிறார்கள். இந்த உத்தரவால் எத்தனை பேர் புகைபிடிப்பதை நிறுத்தி விடப்போகிறார்கள்? இது போன்ற தேவையில்லாமல் பிரச்சினையை ஏற்படுத்தாமல் நாட்டுக்குத்தேவையானவற்றை அரசியல்வாதிகள் செய்ய வேண்டும் என்றார் சூடாக.