Don't Miss!
- News நாளை வாக்கு பதிவு: ஸ்டாலின், எடப்பாடி தலைமைக்கு அக்னி பரீட்சை ஏன் தெரியுமா? காரணமே 'பசி' பாஜகதான்!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அர்ச்சனாவை உள்ளே அனுப்பி.. சுரேஷை வெறுப்பேற்றும் பிக்பாஸ்.. ஆரம்பித்த ஆட்டம்.. கடுப்பான சுரேஷ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்திருக்கும் அர்ச்சனா வந்த வேகத்தில் வேலையை ஆரம்பித்துள்ளார்.
Recommended Video
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விஜேவாக பணியாற்றி வந்த அர்ச்சனா, பல தடைகளை தாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இன்று வைல்டு கார்டு என்ட்ரியாக அர்ச்சனா உள்ளே நுழைந்திருப்பது முதல் புரமோவிலேயே தெரிந்தது. அப்போது எல்லாம் ஓகேவா என கேட்ட சனம் ஷெட்டியிடம் இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும் என்றார்.
வாவ்.. பிக்பாஸ் வீட்டிற்கு புது வரவு.. புதிய போட்டியாளர் என்ட்ரி.. இனிமே வேற லெவல்ல இருக்கப்போகுது!
யாருக்கு பிடிக்கவில்லை
அதே மாதிரி உள்ளே சென்ற கொஞ்ச நேரத்திலேயே வேலையை ஆரம்பித்து விட்டார் அர்ச்சனா. சுரேஷ் சாப்பாடு யாருக்கெல்லாம் பிடிக்கவில்லை என்று ஹவுஸ்மேட்ஸகளிடம் கேட்கிறார் அர்ச்சனா. அதற்கு ரியோ சாப்பாடு மட்டும்தான் பிடிக்கும் ஆகையால் கையை தூக்க மாட்டோம் என்கிறார்.
எவன் அவன்..
தொடர்ந்து எவன் அவன் என்கிறார் அர்ச்சனா. அதற்கு சொன்னவனைதான் கேட்டகனும் என்கிறார் சுரேஷ். சொன்னவன கொஞ்சம் கேட்டு சொல்லுங்க என ஒரே ஏக வசனமாக உள்ளது. அதற்கு இப்போ அனுப்பிச்சீங்கன்னா போய் கேட்டுட்டு வந்துருவேன் என்கிறார் சுரேஷ்.
திருஷ்டி பட்டுருக்கும்
அதுக்கு தான் எவ்ளோ வெயிட் பண்ணிட்டு இருக்கோம் என்கிறார் அர்ச்சனா. ஹவுஸ்மேட்டுகள் கலாய்த்தப்படி பங்கமாய் சிரிக்கின்றனர். பின்னர் டெரர் லுக்கை விடும் அர்ச்சனா, உங்களுக்கு ரொம்ப திருஷ்டி பட்டுருக்கும் என்று கூறி அர்ச்சனா அவருக்கு திருஷ்டி சுத்துகிறார்.
கடுப்பான சுரேஷ்
பின்னர் நீங்க ஆங்கரா இருந்திருக்கலாமே என்று கூற, நான் ஆங்கராய் இருந்திருக்கிறேன் என்று தெரிவிக்கிறார் சுரேஷ். தொடர்ந்து அர்ச்சனா சுரேஷை வெறுப்பேற்றி வருகிறார். அதோடு கையில் வாட்டர் பாட்டிலுடன் அந்த இடத்தை விட்டு நகரும் சுரேஷ், வாஷ்ரூமுக்கு செல்கிறார். இப்படியாக உள்ளது மூன்றாவது புரமோ.
விளாசும் நெட்டிசன்ஸ்
இதனை பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்து போயுள்ளனர். நல்ல மனுஷனை இப்படி வெறுப்பேற்றாதீர்கள். அவர் வயதுக்காவது மரியாதை கொடுங்கள் என விளாசியுள்ளனர். இன்னும் சிலர் யாருடைய பருப்பும் சுரேஷிடம் வேகாது என்றும் நீங்கள் வெறுப்பேற்றுவதால் சுரேஷின் கிரேஸ்தான் கூடும் என்றும் கூறி வருகின்றனர்.