Don't Miss!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சூடுபிடிக்கிறது வி.ஜே.சித்ரா வழக்கு.. ஹேம்நாத்திடம் மீண்டும் விசாரணை ?.. சிக்கப்போது யார்?
சென்னை : வி.ஜே.சித்ரா தற்கொலை வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. கணவர் ஹேம்நாத்திடம் மீண்டும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
விஜே சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9ந் தேதி சென்னை நசரத் பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நடிகை சித்ரா ஹேம்நாத் என்பவரை காதலித்து பதிவு திருமணம் செய்திருந்தார். திருமணமாகி 3 மாதத்திற்குள்ளேயே கணவருடன் தங்கியிருந்த சித்ரா தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
விஜே சித்ரா மரண வழக்கு மீண்டும் உயிர் பெறுகிறதா? அரசியல் பின்புலம் உள்ளதா? ஹேம்நாத் புகார் ஏன்?
உயிருக்கு ஆபத்து
விஜே சித்ரா தற்கொலையை அடுத்து, ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து 3 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்த ஹேம்நாத் சமீபத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி போலீஸில் புகார் அளித்தார். சித்ரா மரணத்திற்கு காரணம் சில அரசியல் தலைவர்களும் ஒரு மாஃபியா கும்பலும் தான் என்றார்.
கண்ணீருடன் பெற்றோர்
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சித்ராவின் பெற்றோர். சித்ராவின் மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம் என்றும், என் மகளுக்கு என்ன நடந்தது? தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம்? என்பதற்கு ஹேம்நாத் பதில் சொல்லியே ஆக வேண்டும் கண்ணீருடன் கூறியிருந்தனர்.
நீதி வேண்டும்
மேலும், சித்ராவின் பெற்றோர் அந்த பேட்டியில், என் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும், முதலமைச்சரை சந்திக்க பல முறை மனு போட்டேன், கோட்டைக்கும் போனேன் ஆனால், அவரை பார்க்க முடியல, இந்த பேட்டியின் மூலமாக அவருக்கு கோரிக்கை வைக்கிறேன் என்று கேட்டுக்கொண்டு இருந்தனர்.
மீண்டும் விசாரணை
ஹேம்நாத் கூறுவது போல விஜே சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய அரசியல்வாதிகள் யார் என்றும், அதற்கான ஆதாரங்களை திரட்ட வேண்டிய கட்டாயத்தில் போலீஸார் உள்ளனர். இதனால், ஹேம்நாத்தை மீண்டும் விசாரிக்க உள்ளனர். அதேபோல, சித்ராவின் பெற்றோரையும் விசாரிக்க உள்ளனர். இதனால், விஜே சித்ராவின் தற்கொலை வழக்கு தற்போது சூடுபிடித்துள்ளது.
-
சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!