Don't Miss!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- News இப்போ தும்முனா சரியா இருக்கும்..! எடப்பாடியா? திமுகவா? ஓபிஎஸ் டீமிலிருந்து எஸ்கேப்பாகும் புகழேந்தி?
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சித்ராவை நினைத்து நினைத்து.. இன்னும் ஏங்கும் ரசிகர்கள்!
சென்னை: விஜே சித்ரா இறந்து இரண்டு மாதங்கள் ஆனாலும் அவருடைய ரசிகர்கள் அதை மறக்காமல் அவருடைய போட்டோக்களை வைத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வருகிறார்கள் .
Recommended Video
இந்த போஸ்டர்களை பார்த்து பலர் கண்கலங்கி கமெண்ட்களை போட்டு வருகின்றனர் . சித்ராவின் போட்டோஸ்களும் பழைய வீடியோக்களும் தற்போது வைரலாக பரவி வருகிறது.
டிவிகளில் தொகுப்பாளராக அறிமுகமாகி சீரியல்களில் முதல்முறையாக சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நகைச்சுவை கேரக்டரில் ரசிகர்களின் மனதில் புகுந்து விளையாடியவர் சித்ரா.
முல்லை
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் மக்களின் மனதில் வாசம் வீசிக்கொண்டிருந்த சித்ரா திடீரென்று இறந்த செய்தி கேட்டு அவருடைய ரசிகர்களும் நண்பர்களும் தவித்துக் கொண்டிருந்தனர் .இந்த நிலையில் அவர் இறந்து இன்றோடு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் அவருடைய இழப்பை மறக்காமல் அவருடைய ரசிகர்கள் ஏங்கி வருகிறார்கள்.
சிரித்த முகம்
எப்போதுமே சிரித்த முகமாக இருந்த சித்திராவின் முகத்தை யாராலும் மறக்க முடியாமல் இருந்து வருகிறார்கள் .ஒரு மனநல மருத்துவராக இருந்து அனைவருக்கும் எனர்ஜி மட்டுமே கொடுத்து வந்த இவர் தற்போது இல்லை என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இருந்து வருகிறார்கள்.
அறிவு
அழகிலும் சரி அன்பிலும் சரி இவருக்கு நிகர் யாருமில்லை என்று தான் இவருடைய ரசிகர்கள் எப்போதுமே கூறி வந்தனர். கூட இருப்பவர்களிடம் சந்தோஷத்தை மட்டுமே பகிர்ந்து கொண்ட இவர் தன்னுடைய கவலையை யாருக்கும் சொல்லாமல் தற்போது அனைவரையும் கவலையில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டார் என அவருடைய ரசிகர்கள் வருத்தத்தோடு தெரிவித்து வருகிறார்கள்.
நாளுக்கு நாள் மர்மம்
அவருடைய இறப்பில் நாளுக்கு நாள் ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்ந்து வந்தாலும் இன்னும் முழுமையான காரணம் தெரியவில்லை .ஆனாலும் அவருடைய ரசிகர் தற்கொலை செய்து கொள்ளும் கோழை அல்ல என்கிறார்கள் .எப்போதுமே ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக ரசிகர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்த இவர் இடத்தில் யாரும் வர முடியாது என்று தான் அனைவரும் கூறி வருகிறார்கள் .
ரசிகர்களின் கண்ணீர்
அவருடைய பிறந்தநாளுக்கு ரசிகர்கள் அனுப்பிய வாழ்த்து மடல்களும் ஷிப்ட்களும் அவரது வீட்டில் ஆங்காங்கே குவித்து வைக்கப் பட்டிருப்பதை பார்த்து கண்ணீரோடு கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் பிறந்த நாளுக்கும் அவர் சர்ப்ரைஸ் செய்த வீடியோக்களும் அவர்களுக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் களையும் ரசிகர்கள் வேதனையோடு இன்ஸ்டாகிராமில் ஒவ்வொருவராக பதிவிட்டு வருகிறார்கள்.
ரசிகர்களின் கமெண்ட்ஸ்
இன்று அவர் இறந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் அவருடைய போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படத்திற்கு மாலை அணிந்து பலர் வேதனையோடு கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். அவர் நடித்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அதற்காக அவருடைய ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
கனவு
இந்த திரைப்படத்தின் அவருடைய ஆசை கனவு எல்லாமே அடங்கி இருந்தது என்று சித்ராவின் ஆசை மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களின் கனவாகவும் இருந்தது என சில ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இன்னும் பல வருடமானாலும் சித்ராவின் தாக்கத்திலிருந்து யாரும் விடுபட முடியாது போல. அந்த அளவுக்கு அத்தனை பேரின் இதயத்தையும் நனைத்து விட்டுப் போயுள்ளார் சித்ரா.