Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
விஜே சித்ரா மரண வழக்கு மீண்டும் உயிர் பெறுகிறதா? அரசியல் பின்புலம் உள்ளதா? ஹேம்நாத் புகார் ஏன்?
சென்னை: சின்னத்திரை நடிகை விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டு இறந்தது பலரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால், அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவருடன் பணியாற்றிய சக நடிகைகளும், விஜே சித்ராவின் பெற்றோர்களும் கூறி வந்தனர்.
போலீசாரும் தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பாக விஜே சித்ராவின் கணவர் ஹேம்நாத்தும் விசாரணை வளையத்திற்குள் சிக்கினார். இந்நிலையில், ஹேம்நாத் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அளித்துள்ள புதிய புகார் பரபரப்பை கிளப்பி உள்ளது.
உடலில் சர்க்கரை அளவு குறைந்தது... பிரபல நடிகை மருத்துவமனையில் திடீர் அனுமதி!
விஜே சித்ரா மரணம்
மக்கள் தொலைக்காட்சியில் தொடங்கிய விஜே சித்ராவின் மீடியா பயணம் சன் டிவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா, விஜய் டிவியில் சீரியல் மற்றும் தொகுப்பாளினி என நீண்டு கொண்டே சென்றது. ஆனால், திடீரென தனியார் ஹோட்டல் அறையில் அதிகாலை நேரத்தில் சித்ரா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பலருடன் தொடர்பு
சின்னத்திரையில் நடித்து வந்த விஜே சித்ரா வெள்ளித்திரையில் கால்ஸ் என்கிற படத்திலும் நடித்திருந்தார். அவரது மறைவுக்கு பிறகு அந்த படம் வெளியானது. கடைத் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு விஜே சித்ரா சென்று வந்த நிலையில் அவருக்கு பலருடன் தொடர்பு உள்ளதாக ஏகப்பட்ட யூகங்கள் அவரது மறைவுக்கு பின்னர் கிளம்பின. இதில், கொடுமை என்னவென்றால் விஜே சித்ராவின் கணவர் ஹேம்நாத்தே 4 பேருடன் அவருக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்திருப்பது தான் விஜே சித்ராவின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
உயிருக்கு ஆபத்து
கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி விஜே சித்ரா காலமானார். இந்நிலையில், தற்போது ஹேம்நாத், விஜே சித்ரா மரணத்தில் அரசியல் பின்புலம் இருப்பதாகவும், அவர்களின் பெயர்களை வெளியே சொன்னால் தனது உயிருக்கு ஆபத்து என்றும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் பரபரப்பை கிளப்பி உள்ளது.
மீண்டும் உயிர்பெறும் வழக்கு
ஹேம்நாத் இப்படியொரு பரபரப்பு புகார் அளித்துள்ள நிலையில், அரசியல் பின்புலம், தொழிலதிபர் என பலர் பற்றி குறிப்பிட்டுள்ள நிலையில், விஜே சித்ராவின் மரண வழக்கு மீண்டும் உயிர்பெறுகிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.