Vj Parvathy: கடற்கரை மணலில் 'கடல் கன்னி' தோற்றத்தில் விஜே பார்வதி... லைக்குகளை அள்ளும் புகைப்படம்!
சென்னை: விஜே பார்வதி கடற்கரை மணலில் மண்டியிட்டு கடல் கன்னி போல இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கி பார்வதி தற்போது வீடியோ ஜாக்கியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர், தற்போது சென்னையில் செட்டிலாகி விட்டார். இவருடையே ஸ்பெஷலே அழகான தமிழ் உச்சரிப்பு தான்.
விஜே பார்வதி: ஜர்னலிசம் படித்துள்ள விஜே பார்வதி, ஆரம்பத்தில் செய்தியாளராக பணியாற்றி உள்ளார். ஆர்ஜேவாக இருந்த பார்வதி மடக்கி மடக்கி கேள்வி கேட்கும் திறமைகொண்டவர். இவரின் அதிரடியான பேச்சை பார்த்து இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உருவானது. ரேடியோ ஜாக்கியாக இருந்த இவர்,கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் குக் வித் கோமாளி 2 உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
துணிச்சலான பேச்சு: யூடியூப் தளங்களில் பல்வேறு விதமான சர்ச்சைக்குள்ளான தலைப்புகளில் பேசி ரசிகர்களை தன்பக்கம் திருப்பினார். ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அர்ஜுன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் ஆண்களுக்கு மத்தியில் கடுமையான டாஸ்கை அசால்டாக செய்த அசத்தினார்.

ஹீரோயின்களுக்கே டஃப்: சர்வைவர் நிகழ்ச்சிக்கு பிறகு இணையத்தில் ஆட்டிவாக இருக்கும் விஜே பார்வதி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அதிரிபுதிரியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது, இன்ஸ்டாகிராமில் நேரலையிலும் பேசி வருகிறார். இதனால், இணையத்தில் ஏராளமான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
குவியும் லைக்குகள்: இந்நிலையில், விஜே பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரை மணலில் மண்டி இட்டு இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தொடை அழகில் ரம்பாவை ஓரம் கட்டிவிட்டீங்க என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படம் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே லைக்குகளை குவித்து வருகிறது


Click it and Unblock the Notifications











