28 வயசாச்சு.. இன்னும் மாப்பிள்ளை கிடைக்கல.. விஜே பார்வதிக்கு இப்படி ஒரு கஷ்டமா?
சென்னை: மதுரையை பூர்வீகமாகக் கொண்ட விஜே பார்வதி, ஆரம்பத்தில் செய்தியாளராக தனது பணியை தொடங்கினார். இதைத் தொடர்ந்து ஆர்ஜேவாக மாறிய இவர், கேட்பதற்கு கூச்சப்படும் கேள்விகளை அசால்ட்டாக மக்களிடம் கேட்டு, குறிப்பாக இளசுகளிடம் கேட்டு அவர்களிடம் பதிலை வாங்கி பிரபலமானவர். தனக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
ஆர்ஜேவான பார்வதி தற்போது வீடியோ ஜாக்கியாக பல திரைப்பிரபரலங்களை பேட்டி எடுத்து வருகிறார். யூடியூப் தளங்களில் பல்வேறு விதமான சர்ச்சைக்குள்ளான தலைப்புகளில் பேசி ரசிகர்களை தன்பக்கம் திருப்பி வருகிறார் விஜே பார்வதி. இவர், ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடுமையான டாஸ்கை அசால்டாக செய்து, ஆண் போட்டியாளர்களுக்கே டஃப் கொடுத்தார்.

சினிமாவில்: முதலில் சின்னத்திரையில் தலைகாட்டிய விஜே பார்வதி, ஹிப்பாப் ஆதி நடித்த சிவகுமாரின் சபதம் படத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து அண்மையில் ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளிவந்த My3 வெப் தொடரில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, சில படங்களில் நடித்து நடிகை என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.
சோஷியல் மீடியாவில் பிஸி: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், வீட்டில் வொர்க் அவுட் செய்யும் போட்டோ, குட்டை கவுனை அணிந்துகொண்டு தொடையை காட்டிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இவரை ரசிகர்கள் 'குட்டி மியாகலிபா' எனவும் அழைப்பதுண்டு. அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இன்னும் மாப்பிள்ளை கிடைக்கல: திறமைசாலியான விஜே பார்வதி, நான் மதுரை பெண்ணு தான் எனக்கு 28 வயசு ஆகுது. என் உறவினர்கள் எல்லாம் என் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, என் அம்மா கிட்ட போன் பண்ணி,என்ன உன் பொண்ணு இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கா. இப்படி எல்லாம் பேசுனா எப்படி மாப்பிள்ளை கிடைக்கும் என்று சொன்னாங்க. அவங்க எந்த நேரத்தில் சொன்னாங்களோ அதனாலத்தான் இன்னமும் எனக்கு மாப்பிள்ளையே கிடைக்கவில்லை என்று தனது வேதனையை சிரித்துக்கொண்ட ஜாலியாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











