Don't Miss!
- Technology பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- News தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
- Automobiles என்ன மேடம்... ஹர்பஜன் சிங் மாதிரி இருக்கீங்க!! விசித்திரமான கெட்-அப்பில் ஸ்கூட்டரில் சென்ற பெண் - வீடியோ!
- Education மே 2-வது வாரத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்-லைன் விண்ணப்ப தேதி அறிவிப்பு...!
- Sports ஐதராபாத் சாதனையால் ஆர்சிபியை பொளக்கும் ரசிகர்கள்.. வெளுக்கப்படும் ஹர்திக்.. தெறிக்கும் மீம்ஸ்!
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
வேகமாக மோதிய கார்கள்.. பாடகர் விஜய் யேசுதாஸ் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது எப்படி?
கொச்சி: பிரபல பின்னணி பாடகர் விஜய் ஜேசுதாஸ் கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார்.
பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். பின்னணி பாடகராக இருக்கிறார்.
தொடர்ந்து படங்களில் பாடல்கள் பாடி வருகிறார். நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
படப்பிடிப்பில் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட காக்கிச்சட்டை பட நடிகர்.. அதிரடி கைது.. பரபரப்பு!
இனிமை பாடல்கள்
இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இருக்கிறார். இதற்காக மலையாளம், தமிழ், தெலுங்கில் பல விருதுகளை பெற்றுள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லனாக நடித்தார்.
படைவீரன் ஹீரோ
இந்தப் படத்தில் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. பின்னர் படைவீரன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். தனசேகரன் இயக்கிய இந்தப் படத்தில் அமிர்தா ஐயர் ஹீரோயின். இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்கவும் முயற்சி செய்து வருகிறார்.
துராவூர் ஜங்க்ஷன்
இவர் திங்கட்கிழமை இரவு, 10 மணியளவில் கொல்லத்தில் இருந்து கொச்சிக்கு காரில் சென்றார். காரை அவரே ஓட்டினார். ஆழப்புழாவில் இருக்கும் துராவூர் ஜங்க்ஷன் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
கடுமையான சேதம்
மோதிய வேகத்தில் இரண்டு கார்களின் முன் பகுதியில் கடுமையாக சேதம் அடைந்தது. கார்களில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.விஜய் ஜேசுதாஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் இவர் புதிய பிசினஸ் தொடங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.
மரியாதை இல்லை
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், 'மலையாள சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கும், பின்னணி பாடகர்களுக்கும் உரிய மரியாதை கிடைப்பதில்லை. அதனால் மலையாள சினிமாவில் இனி பாடப் போவதில்லை என முடிவு செய்து இருக்கிறேன் என விஜய் யேசுதாஸ் கூறியிருந்தார்.