Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார்: கணவர் மீது பிக் பாஸ் பிரபலம் புகார்
Recommended Video
மும்பை: தனது கணவர் தன்னை கழுத்தை நெரித்து கொலை செய்யப் முயன்றதாக முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் சோபியா ஹயாத் தெரிவித்துள்ளார்.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் சோபியா ஹயாத். அதன் பிறகு அரை குறை ஆடைகளில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இதற்கிடையே கன்னியாஸ்திரியாகிவிட்டேன் என்று அறிவித்துவிட்டு ஒரு நாள் திடீர் என்று மணக்கோலத்தில் வந்து நின்றார்.
பிராடு
ரோமானியாவை சேர்ந்த தனது கணவர் விளாட் ஸ்டானெஸ்கு ஒரு பிராடு என்பதை தெரிந்து கொண்ட பிறகு அவரை வீட்டை விட்டு விரட்டிவிட்டார் சோபியா ஹயாத்.
சோபியா
விளாட் தன்னை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றதாக தற்போது சோபியா ஹயாத் தெரிவித்துள்ளார். விளாட் மீது போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.
சைக்கோ
லண்டனில் வசித்து வரும் சோபியாவின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விளாடை தேடி வருகிறார்கள். விளாட் ஒரு சைக்கோ என்று போலீசார் நினைக்கிறார்கள் என்று சோபியா கூறியுள்ளார்.
பெயர்
உன் உயிலில் என் பெயரை எழுதியிருக்கிறாயா என்று ஒரு நாள் விளாட் என்னிடம் கேட்டார். உண்மையாக காதலிப்பவர்கள் யாரும் அப்படி கேட்க மாட்டார்கள். மேலும் திருமண மோதிரத்தை அவர் ரூ. 1.5 லட்சத்திற்கு விற்றுவிட்டார் என்கிறார் சோபியா.
சாக்ஸ்
விளாட் என் சாக்ஸை கூட மறைத்து வைத்தார். சொந்த வீட்டிலேயே திருடப் பார்த்தார். பெரும் கடனில் இருந்து கொண்டு தான் ஒரு பெரிய பிரபலம் என்று பொய் சொல்லி என்னை திருமணம் செய்தார் என்று சோபியா தெரிவித்துள்ளார்.