Don't Miss!
- News வில்லங்க சான்றிதழ்.. வீடு, மனை வாங்கறீங்களா? பத்திரப் பதிவுத்துறை சர்ப்ரைஸ்.. இனி லேட்டாகாது.. சபாஷ்
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
”என் வாழ்க்கை படமாகினால் தீபிகாதான் நடிக்க வேண்டும்”- சானியா மிர்சா வேண்டுகோள்!
டெல்லி: இந்தியாவில் பிரபல டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தன்னுடைய வாழ்க்கையை தற்பொழுது படமாக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அப்படி படமாக்கப்பட்டால் தனது கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தேசிய குழந்தைகள் திரைப்பட விழாவில் இதுபற்றிய தகவல்களை பத்திரிக்கையாளர்களிடம் சானியா மிர்சா தெரிவித்தார்.
என்னைப் பற்றிய விஷயங்கள்:
அதில், "என்னை பற்றி ஒரு திரைப்படம் வெளியாவதை நான் விரும்பவில்லை. என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நான் விரும்புவதில்லை.
எனக்கு விருப்பமில்லை:
என் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க என்னிடம் அனுமதி கேட்டு வந்த பல டைரக்டர்களிடம் நான் மறுப்பு தெரிவித்திருக்கிறேன்.
தீபிகாதான் நடிக்க வேண்டும்:
ஆனால், ஒருவேளை எதிர்காலத்தில் எனது மனதை நான் மாற்றிக் கொள்வேனா என்று எனக்கு தெரியாது. அப்படி எனது வாழ்க்கை திரைப்படமானால் அதில் எனது கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
சுயசரிதையில் “பிஸி”:
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட சானிய மிர்சா தற்போது தனது சுயசரிதையை எழுதி வருவதில் பிஸியாக உள்ளார்.
அனுபவங்களின் பகிர்வு:
இதுவரை 26 அத்தியாயங்களை எழுதி முடித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், "எனது அனுபவங்களை முடிந்த வரையில் இந்த புத்தகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
எழுத வேண்டியது இன்னும் உள்ளது:
என்னை பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை அதில் கொடுத்துள்ளேன். 2012 வரையிலான எனது வாழ்க்கையை இதுவரை பதிவு செய்து முடித்திருக்கிறேன். இன்னும் சில அத்தியாயங்களை எழுதி முடிக்க வேண்டியுள்ளது" என்றார்.