Don't Miss!
- News கவலைக்கிடம்.. தற்கொலைக்கு முயன்ற ஈரோடு எம்பி உடல்நிலை எப்படி இருக்கு? அடுத்த 48 மணிநேரம் முக்கியம்
- Automobiles ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
- Lifestyle சனி நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
- Sports இதுதான் தோனியின் பவர்.. பார்த்த உடன் மிரண்டு போன மும்பை லாபி.. சிஎஸ்கே மேட்ச்சில் என்ன நடந்தது?
- Technology 650 கிமீ உயரத்தில்.. உலக நாடுகளை வாய்பிளக்க விட்ட ISRO விஞ்ஞானிகள்.. பிசிறு தட்டாம சாதித்த POEM-3 மிஷன்!
- Finance இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் தான் கெத்து!! கல்வி, வேலைவாய்ப்பில் என்றுமே நம்பர் ஒன்..!
- Education பயிற்சி மையத்தில் சேராமலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
கவிஞர் வாலி எழுதிய கடைசிப்பாட்டு என்ன தெரியுமா...?
கிட்டத்தட்ட பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களை எழுதிய கவிஞர் வாலி சென்ற வாரம் காலமானார். மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதற்கு முன்னர், வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் காவியத்தலைவன் படத்திற்கான பாடல்களை இயற்றும் பணியில் பிசியாக இருந்தார் வாலி.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது கூட, விரைவில் குணமாகி காவியத்தலைவன் படப்பாடல்களை விரைவில் முடித்துத் தருகிறேன் என உறுதி அளித்தாராம் வாலி.
ஆனால், காலம் அவரை அதற்குள் அழைத்துக் கொண்டான். ஆனால், உடல் நலம் குன்றுவதற்கு முன்னரே, காவியத்தலைவனுக்காக 'கோடாலி முடிச்சு போட்டு...' என ஒரு பாடலை எழுதிக் கொடுத்துள்ளார் வாலி. இது ஒரு காதல் பாடலாம்.
இதன் மூலம், காவியத்தலைவன் படம் திரைக்கு வந்து வெற்றி பெறுகிறதோ இல்லையோ, வாலி கடைசியாக பாடல் எழுதிய படம் என்ற சிறப்பை இப்போதே பெற்றுவிட்டது காவியத்தலைவன்.
மேலும், ஒரு வந்தனப் பாடலையும் காவியத்தலைவனுக்காக வாலி எழுதிக் கொடுத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார் வசந்தபாலன்.