Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
நான் சுயசரிதை எழுதினால் சிலர் எதற்காக பயப்படுகிறார்கள்?: ஷகீலா
சென்னை: குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்க வந்த தன்னை கவர்ச்சி நடிகையாக்கிவிட்டனர் என்று நடிகை ஷகீலா தெரிவித்துள்ளார்.
கவர்ச்சியில் மலையாள திரை உலகை மிரள வைத்தவர் நடிகை ஷகீலா. அவர் தற்போது சுயசரிதை எழுதியுள்ளார். அதில் தனது கசப்பான அனுபவங்கள், பெரிய தலைகளின் மறுபக்கம் ஆகியவை பற்றி எழுதியிருக்கிறாராம்.
இதனால் ஷகீலாவை சுயசரிதை எழுதக் கூடாது என்று மிரட்டுகிறார்களாம். இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில்,
கவர்ச்சி நடிகை
நான் சினிமாவில் நடிக்க வந்தபோது உடம்பை மறைத்துக் கொண்டு குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு கவர்ச்சியான கதாபாத்திரங்களை கொடுத்து கவர்ச்சி நடிகையாக்கிவிட்டனர். அதற்காக நான் வருத்தப்படவில்லை என்றார் ஷகீலா.
ஏன் பயப்படுகிறார்கள்?
நான் சுயசரிதை எழுவதால் திரை உலகைச் சேர்ந்த சிலர் அஞ்சுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் ஏன் பயப்பட வேண்டும் என்று எனக்கு புரியவில்லை என்று ஷகீலா தெரிவித்தார்.
உதவியும் செய்தனர்
நான் என் வாழ்க்கையைப் பற்றி புத்தகம் எழுதி வெளியிடப் போகிறேன். நான் நடிக்க வந்தபோது எனக்கு பலர் உதவி செய்துள்ளனர். சுயசரிதையில் நான் நடக்காத எந்த விஷயத்தையும் எழுதவில்லை என்று ஷகீலா கூறினார்.
அழுது அழுது
என் சுயசரிதையை அழுது அழுது எழுதியுள்ளேன். சுயசரிதை தயாராகியுள்ளது. இதை தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடவிருக்கிறேன் என்றார் ஷகீலா.