Don't Miss!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நான் சுயசரிதை எழுதினால் சிலர் எதற்காக பயப்படுகிறார்கள்?: ஷகீலா
சென்னை: குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்க வந்த தன்னை கவர்ச்சி நடிகையாக்கிவிட்டனர் என்று நடிகை ஷகீலா தெரிவித்துள்ளார்.
கவர்ச்சியில் மலையாள திரை உலகை மிரள வைத்தவர் நடிகை ஷகீலா. அவர் தற்போது சுயசரிதை எழுதியுள்ளார். அதில் தனது கசப்பான அனுபவங்கள், பெரிய தலைகளின் மறுபக்கம் ஆகியவை பற்றி எழுதியிருக்கிறாராம்.
இதனால் ஷகீலாவை சுயசரிதை எழுதக் கூடாது என்று மிரட்டுகிறார்களாம். இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில்,
கவர்ச்சி நடிகை
நான் சினிமாவில் நடிக்க வந்தபோது உடம்பை மறைத்துக் கொண்டு குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு கவர்ச்சியான கதாபாத்திரங்களை கொடுத்து கவர்ச்சி நடிகையாக்கிவிட்டனர். அதற்காக நான் வருத்தப்படவில்லை என்றார் ஷகீலா.
ஏன் பயப்படுகிறார்கள்?
நான் சுயசரிதை எழுவதால் திரை உலகைச் சேர்ந்த சிலர் அஞ்சுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் ஏன் பயப்பட வேண்டும் என்று எனக்கு புரியவில்லை என்று ஷகீலா தெரிவித்தார்.
உதவியும் செய்தனர்
நான் என் வாழ்க்கையைப் பற்றி புத்தகம் எழுதி வெளியிடப் போகிறேன். நான் நடிக்க வந்தபோது எனக்கு பலர் உதவி செய்துள்ளனர். சுயசரிதையில் நான் நடக்காத எந்த விஷயத்தையும் எழுதவில்லை என்று ஷகீலா கூறினார்.
அழுது அழுது
என் சுயசரிதையை அழுது அழுது எழுதியுள்ளேன். சுயசரிதை தயாராகியுள்ளது. இதை தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடவிருக்கிறேன் என்றார் ஷகீலா.