Don't Miss!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆசைக் காட்டி மோசம் செய்தாரா சூர்யா?
தமிழ் சினிமாவில் இது குறும்பட இயக்குநர்களின் சீஸன். ஆண்டுக்கணக்கில் அசிஸ்டெண்ட்டாகப் பணியாற்றி விட்டு அடித்து பிடித்து இயக்குநர் ஆன காலம் போய் ஒரே ஒரு குறும்படத்தில் இயக்குநர் ஆனவர்களைப் பார்த்து வருகிறோம்.
குறும்பட இயக்குநர்களுக்காக நடிகர் சூர்யா ஒரு போட்டி அறிவித்தார். மூன்றே நிமிடங்களுக்குள் யார் அழகாக ஒரு கதையைச் சொல்கிறார்களோ அவர்களுக்கு பணப் பரிசும், சூர்யாவுடைய 2டி நிறுவனத்தில் கதை சொல்ல ஒரு வாய்ப்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன் பரிசளிப்பு விழா நேற்று முன் தினம் நடந்தது. முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு தலா 3, 2 ஒரு லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது.
ஆனால் கதை சொல்லும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதைப் பற்றி ஆரம்பத்தில் வந்த விளம்பரங்களில் சொன்னவர்கள் சமீபகால விளம்பரங்களிலும் புரமோஷன்களிலும் வாயே திறக்கவில்லை. பதிலாக மூவருக்கும் சூர்யாவின் நிறுவனத்தில் இண்டெர்ன்ஷிப் வழங்கப்படும் என சொல்லியிருக்கிறார்கள். இண்டெர்ன்ஷிப்பில் பணிபுரிய மூவரில் இருவர் விரும்பவில்லையாம்.
படம் இயக்கும் கனவில் இருந்தவர்களுக்கு சூர்யாவின் இந்த முடிவு நிச்சயம் ஏமாற்றத்தைத் தந்திருக்கும் என்கிறார்கள்.