Don't Miss!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆத்தீ... விவேகம் படத்தில் சொன்ன ஆபத்து நிஜமாவே நடந்துச்சா?
சென்னை : சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோரின் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் திரைக்கு வந்த படம் 'விவேகம்'.
இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. ஆனால், எதிர்மறையான விமர்சனங்களால் படத்தின் வசூலுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.
சென்னையில் மட்டுமே இந்தப் படம் ரூபாய் 8.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இன்னும் பல திரையரங்குகளில் தொடர்ந்து திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
செயற்கை பூகம்பம் :
படத்தில் விவேக் ஓபராய் ஒரு குறிப்பிட்ட ஏஜென்ஸிக்கு வேலை செய்பவராக வருவார். தாங்கள் இன்னும் சிறிது நேரத்தில் செயற்கையான பூகம்பத்தை உருவாக்கி, அதன் மூலம் போர் உண்டாக்கவுள்ளதாகவும் கிளைமாக்ஸில் அஜித்திடம் கூறுவார் விவேக் ஓபராய்.
உண்மையிலேயே நிகழ்ந்துவிட்டது :
அந்தக் காட்சி கற்பனையாக உருவாக்கப்பட்டதுதான் என்றாலும், அவர் கூறியது போலவே சமீபத்தில் வடகொரியாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் இதை விவேகம் படத்துடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.
5.7 ரிக்டர் நிலநடுக்கம் :
வட கொரியா ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனை நடத்தி செயற்கை நிலநடுக்கத்தை உண்டாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 எனப் பதிவாகியிருப்பதாகத் தென் கொரியா தெரிவித்திருக்கிறது.
அச்சுறுத்தும் வட கொரியா :
ஏற்கனவே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வட கொரியா வெற்றிகரமாக மேற்கொண்டது. தற்போது அணுகுண்டு சோதனையும் வெற்றிகரமாக அமைந்துள்ளதால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக வட கொரியா திகழும்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!