Don't Miss!
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'மாலை நேரத்து மயக்கம்'.. திறந்த மனதுடன் வாருங்கள், பாருங்கள் - கீதாஞ்சலி செல்வராகவன்
சென்னை:மாலை நேரத்து மயக்கம் திரைப்படத்தை திறந்த மனதுடன் பார்க்க வேண்டும் என்று இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவன் கூறியிருக்கிறார்.
செல்வராகவன் எழுத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியிருக்கும் படம் மாலை நேரத்து மயக்கம். புதுமுகங்கள் பாலகிருஷ்ணன், வாமிகாவுடன் இணைந்து அழகம்பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
வருகின்ற தமிழ் புத்தாண்டு தினத்தில் மாலை நேரத்து மயக்கம் வெளியாகிறது.
மாலை நேரத்து மயக்கம்
செல்வராகவன் எழுத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியிருக்கும் படம் மாலை நேரத்து மயக்கம்.புதுமுகங்கள் பாலகிருஷ்ணன், வாமிகாவுடன் இணைந்து அழகம்பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். தணிக்கைக் குழுவினர் 'ஏ' சான்றிதழ் அளித்திருக்கும் இப்படம் வருகின்ற தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் உலகமெங்கும் வெளியாகிறது.
படத்தின் கதை
படத்தின் இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவன் படம் குறித்து கூறும்போது "இந்தப் படம் ஒரு வழக்கமான காதல் கதையோ, காமெடிப் படமோ கிடையாது. படத்தின் நாயகி, நாயகனுக்கு இடையில் நடைபெறும் உருக்கமான காதலே மாலை நேரத்து மயக்கம்.அந்தக் காதல் அவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களே படத்தின் கதை.
நாயகன், நாயகி
படத்தின் நாயகன் பாலகிருஷ்ணன் மற்றும் நாயகி வாமிகா இருவரும் மிகவும் திறமைசாலிகள். 2 பேருமே படத்தில் முக்கியமான வேடங்களை ஏற்று நடித்து இருக்கின்றனர். நாயகி வாமிகா மிகவும் சாதாரணமான பெண் அல்ல, அவரது பாத்திரம் சிக்கலான ஒன்று. படத்தின் முதல் காட்சியிலேயே நாயகிக்கு காதல் வந்து விடும்.
திறந்த மனதுடன்
இந்தப் படத்தின் ஒரு பகுதி கதையை செல்வராகவன் தான் எழுதினார். மாலை நேரத்து மயக்கம் படத்தை திறந்த மனதுடன் பாருங்கள். கண்டிப்பாக நீங்கள் இந்தப் படத்தை பார்த்ததற்காக வருத்தப்பட மாட்டீர்கள்" என்று கீதாஞ்சலி நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.