Just In
- 35 min ago
செம அதிர்ஷ்டம்.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் ஹீரோயின்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- 1 hr ago
பிரியா பவானி சங்கருக்கு ஆப்பிள் பாக்ஸ் தேவையில்லை.. நடிகர் அருள்நிதியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
- 1 hr ago
சட்டையை கழட்டி கவர்ச்சியில் ரகளை செய்யும் ஆத்மிகா!
- 2 hrs ago
லக்கி தான்.. அடுத்தடுத்து படங்கள்.. அசற வைக்கும் பிக் பாஸ் லாஸ்லியா.. டிரெண்டாகும் #Losliya
Don't Miss!
- News
புதுச்சேரி காங். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்
- Lifestyle
கர்ப்பகாலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா? எப்படி பாதுகாப்பா வைச்சுக்கணும் தெரியுமா?
- Sports
என்ன இது முட்டாள்தனம்.. கிரிக்கெட்டில் வரப் போகும் புதிய மாற்றம்.. பொங்கி எழுந்த முன்னாள் கேப்டன்!
- Finance
Budget 2021.. பட்ஜெட்டில் விவசாயிகளுக்களுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் சலுகைகள் அதிகரிக்கப்படலாம்!
- Automobiles
பிஎம்டபிள்யூ ஐ3 காரின் நிலைமை என்னவாக போகிறதோ! மனதை திருடும் அம்சங்களை அப்டேட்டாக பெறும் மின்சார கார்...
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'தட்டிக் கேட்கறது உரிமைன்னா, பாராட்டுறதும் நம்ம கடமைதானே...' நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை
சென்னை: அரசு சரியாக செயல்படுகிற போது பாராட்ட வேண்டியதும் நமது கடமைதான் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், இப்போது லக்ஷ்மிபாம் என்ற இந்திப் படத்தை இயக்கியுள்ளார்.
இது அவர் நடித்து தமிழில் ஹிட்டான காஞ்சனா படத்தின் ரீமேக் இது.

போஸ்ட் புரொடக்ஷன்
இதில் பிரபல இந்தி ஹீரோ அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார். திருநங்கை கேரக்டரிலும் அவரே நடிப்பதாக தெரிவித்துள்ளார். கியாரா அத்வானி ஹீரோயின். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து தெலுங்கில் ஹிட்டான ரங்கஸ்தலம் படத்தின் ரீமேக்கிலும் ஆடுகளம் கதிரேசன் தயாரிக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார் லாரன்ஸ்.

ரஜினிக்கு ஆதரவாக
இதற்கிடையே, ரஜினிக்கு ஆதரவாக, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், உங்களுக்குத் தெரியும். என் தலைவரைப் போலவே எனக்கும் எந்தத் தேவையும் இல்லை. எனக்கு அரசியல் தெரியாது. குரு ஒரு வழி காட்டியிருக்கிறார். அவா் வழி நடப்பதும், அவா் பாதையைப் பலப்படுத்துவதும் என் கடமை. அதை நிறைவேற்ற களம் இறங்குகிறேன். மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும். இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.

முன்னெச்சரிக்கை
இந்நிலையில் தமிழக அரசை பாராட்டி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'உலகையே இன்று பெரிதும் அச்சுறுத்தி கொண்டிருக்கும்
கொரோனா வைரஸ் தமிழகத்தில் முழுமையாக பரவி விடாமல் இருக்க, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, துரிதமாகவும் தீவிரமாகவும் எடுத்து, சிறப்பாக செயல்பட்டு வருகின்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் மனப்பூர்வமான பாராட்டுக்கள்!

பாராட்ட வேண்டியது
பொதுவாக ஒரு விஷயத்தில் அரசு சரியாக நடவடிக்கை எடுக்காதபோது, எப்படி தட்டிக் கேட்கிற உரிமை நமக்கு இருக்கிறதோ, அதேபோல, ஒரு விஷயத்தில் அரசு சரியாக செயல்படுகிற போது பாராட்ட வேண்டியதும் நமது கடமை! தமிழக அரசை பாராட்டுகிற அதே நேரம், பொதுமக்களாகிய நாமும் அரசு கூறும், சுகாதார பாதுகாப்பு முறைகளை கவனத்துடன் கடைப்பிடிப்போம்' என்று தெரிவித்துள்ளார்.