Don't Miss!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- News தாய் மடிக்கே திரும்பியதை போல ஃபீல் ஆகுது.. பாஜகவில் இணைந்த சுரங்க மன்னன் ஜனார்த்தன ரெட்டி நெகிழ்ச்சி
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'எனக்கும் கௌரிக்கும் உள்ள உறவு'..... 96 ஆதித்யா பாஸ்கர் சொன்ன க்ளைமாக்ஸ் சீன்!
96 படத்தில் நடித்த ஆதித்யாவும், கௌரியும் காதலிப்பதாக வெளியான செய்திகள் தவறானது.
சென்னை: தனக்கும் கௌரிக்குமான உறவு என்ன என்பது குறித்து 96 படத்தில் நடித்த ஆதித்யா விளக்கமளித்துள்ளார்.
96 படத்தில் விஜய் சேதுபதி, திரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர்கள் ஆதித்யா பாஸ்கரும், கௌரியும். யதார்த்தமான நடிப்பால் சீனியர்களையே தூக்கி சாப்பிட்டார்கள் இந்த ஜூனியர்கள்.
இவர்கள் இருவரும் காதலிப்பதாக நேற்று முழுவதும் ஒரே பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு காரணம் இன்ஸ்ட்டாகிராமில் ஆதித்யா வெளியிட்ட போட்டோ.
இன்ஸ்ட்டாகிராம் பதிவு
கௌரியுடன் போஸ் கொடுத்து நிற்கும் ஆதித்யா, லவ் மூட் எமோஜிகளுடன் இந்த போட்டோவை பதிவிட்டார். அவ்வளவு தான். இதை பார்த்த எல்லோரும், இருவரும் காதலிப்பதாக நினைத்து செய்தியை பரப்பிவிட்டனர்.
பதிவை நீக்கிய ஆதித்யா
சிறிது நேரத்தில் அந்த போட்டோவை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுத்துவிட்டார் ஆதித்யா. ஆனால் மற்றொரு வீடியோவில், "அவ முகத்த பாருங்க... மேரி ஜானு (என்னுடைய ஜானு)இளவரசி தானா? ஆமாம்," என பதிவிட்டுள்ளார்.
காதலை மறுத்த கௌரி
ஆனால் இதனை கௌரி மறுத்துவிட்டார். அவருடைய பதிவில்," நானும் ஆதித்யாவும் காதலிக்கவில்லை. நாங்கள் காதலிப்பதாக உலவும் செய்தியை நம்ப வேண்டாம். பரப்பவும் வேண்டாம். படத்தில் நாங்கள் காதலிப்பது போல் நடித்தோம். நிஜத்தில் அப்படி எதுவும் இல்லை", என விளக்கமளித்துள்ளார்.
ஆதித்யா விளக்கம்
இந்நிலையில் ஆதித்யாவும் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்," எனக்கும் கௌரிக்கும் காதல் இல்லை. நாங்கள் நண்பர்கள் மட்டுமே. நெருங்கிய நண்பர்கள். நடிகர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. எனவே தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். நன்றி", என கூறியுள்ளார்.
ஆதித்யாவின் இந்த பதிவால் நேற்று ஆரம்பித்த இந்த காதல் கதையின் இன்றே க்ளைமாக்சுக்கு வந்துவிட்டது.