Don't Miss!
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மாப்பிள்ளை திருடனாகவே இருந்தாலும், திருமணத்தை நிறுத்தும் ஐடியா இல்லை!- இனியா
திருவனந்தபுரம்: வீட்டில் பணம் திருடிய காதலனுடன் நிச்சயமான தன் சகோதரி திருமணத்தை ரத்து செய்யும் எண்ணமில்லை என்று நடிகை இனியா கூறியுள்ளார்.
தமிழில் வாகை சூடவா, மவுன குரு, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இனியா. முன்னணி நடிகையாக உள்ள இவருக்கு சுவாதி என்ற அக்கா இருக்கிறார். இவர் மலையாளத்தில் டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். திருவனந்தபுரம் கரமணை அருகே உள்ள மருதூர்க் கடவு என்ற பகுதியில் வசிக்கின்றனர்.
சுவாதிக்கும் அதே ஊரை சேர்ந்த ஷாபின் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இரு வீட்டு பெற்றோர் சம்மதத்தோடும் சமீபத்தில்தான் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
திடீரென ஒரு நாள் இரவு சுவாதி திருமணத்துக்காக வாங்கப்பட்ட நகைகளும், ரூ.5 லட்சம் ரொக்கப் பணமும் திருட்டு போனது.
போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளையை நடத்தியவர் சுவாதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையான ஷாபின்தான் என்பது உறுதியானது. இதனால் இனியா குடும்பத்தினர் அதிர்ச்சியானார்கள். சுவாதிக்கும் ஷாபினுக்கும் நிச்சயமான திருமணம் ரத்தாகும் என கூறப்பட்டது.
ஆனால் அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று நடிகை இனியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "என் சகோதரி திருமணத்தை நாங்கள் ரத்து செய்யவில்லை. அது மாதிரி எந்த திட்டமும் இல்லை. வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இந்த விஷயம் குறித்து என் சகோதரியிடம் நான் பேசவில்லை.
ஷாபின் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்தான். அவரது குடும்பம் எங்களை விட வசதியானது. ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு ஷாபின் வந்தார். என் அக்காவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். என் பெற்றோர் ஷாபின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து பேசினர். அதன் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிவானது.
ஷாபினுக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். தவறானவர்களுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதால் இப்படி நடந்து கொண்டாரே என்னமோ.. எங்களைப் பொருத்தவரை உண்மையான குற்றவாளி இன்னும் சிக்கவில்லை என்றுதான் நினைக்கிறோம், என்றார்.
-
போஸ்டர் அடி.. தமிழ்நாட்டுக்கே இன்வைட் ரெடி.. 4ஆவது திருமணத்தை இப்படிதான் செய்வேன்.. வனிதா ஓபன் டாக்
-
Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
-
Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!