Don't Miss!
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தனுஷுக்கும், எனக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது, ஆனால்...: சவுந்தர்யா
சென்னை: விஐபி 2 படத்தில் வேலை செய்தபோது தனக்கும், தனுஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சவுந்தர்யா தனது தந்தை ரஜினிகாந்தை இயக்கியுள்ளார். தற்போது அக்கா ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷை வைத்து விஐபி 2 படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறியதாவது,
நண்பர்கள்
நானும், தனுஷும் நல்ல நண்பர்கள். விஐபி 2 படக்கதையை உருவாக்கிய பிறகு எப்பொழுது பார்த்தாலும் அது பற்றியே ஆலோசித்துக் கொண்டிருந்தோம்.
கருத்து வேறுபாடு
விஐபி 2 பட விஷயத்தில் எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால் அதை பேசித் தீர்த்துக் கொண்டோம். வேலை விஷயத்தில் தனுஷ் எனக்கு பெரிதும் உதவி செய்தார்.
தனுஷ்
தனுஷ் திரைத்துறையில் அனுபவசாலி என்பதால் அவர் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். திரைக்கதை விஷயத்தில் அவர் எனக்கு முழு சுதந்திரம் அளித்தார்.
ரஜினி
அப்பா ரஜினி, தனுஷ் இருவரையும் இயக்குவது எளிது தான். கேமராவுக்கு முன்பு வந்துவிட்டால் அவர்கள் சீரியஸாகிவிடுவார்கள். வேலை என்கிறபோது மகள் என்றோ, மச்சினி என்றோ அவர்கள் பார்ப்பது இல்லை என்றார் சவுந்தர்யா.