twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரித்திக்கை பிரிந்தது ஏன்?: சொல்கிறார் சூசன்

    By Siva
    |

    மும்பை: தனிப்பட்ட விருப்பங்களின்படி தான் தாங்கள் பிரிந்ததாக நடிகர் ரித்திக் ரோஷனின் மனைவி சூசன் தெரிவித்துள்ளார்.

    நடிகர் சஞ்சய் கானின் மகளான சூசன் ரித்திக் ரோஷனை 4 ஆண்டுகள் காதலித்து 20.12.2000 அன்று திருமணம் செய்து கொண்டார். 13 ஆண்டுகள் ரித்திக்குடன் வாழ்ந்த பிறகு தற்போது அவர் பிரிந்து சென்றுவிட்டார்.

    சூசன் என்னை பிரிய முடிவு செய்துள்ளார் என்று ரித்திக் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இந்நிலையில் பிரிவு குறித்து சூசன் கூறுகையில்,

    We've made our own choices: Sussanne on split with Hrithik

    நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மதிப்பும், அக்கறையும் வைத்துள்ளோம். எங்களின் தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் தான் பிரிவு முடிவை எடுத்துள்ளோம். நாங்கள் இரண்டு அருமையான குழந்தைகளின் பெற்றோர். அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அதை எதனாலும் மாற்ற முடியாது என்றார்.

    ரித்திக் ரோஷன் உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். வரும் 20ம் தேதி அவர்களின் 13வது திருமண தினம் வரும் நிலையில் சூசன் ரித்திக்கை பிரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Sussanne, Bollywood actor Hrithik Roshan's wife of 13 years, said their separation is based on their 'individual choices'. But, they will continue to care for each other and for their two sons.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X