Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கருணாநிதி என்று பெயரை கூறினால் அப்பா எங்களை தலையிலேயே அடிப்பார்: பிரபு உருக்கம்
Recommended Video
சென்னை: கருணாநிதி என்று அவரின் பெயரை கூறினால் அப்பா எங்களை தலையில் அடிப்பார் என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. ராஜாஜி அரங்கம் உள்ள பகுதி மக்களின் கண்ணீர், கதறலால் சோகமாக காட்சியளிக்கிறது.
நடிகர் பிரபு தனது குடும்பத்தாருடன் வந்து கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கருணாநிதி பற்றி அவர் கூறியதாவது,
பெரியப்பா
என் அப்பாவுக்கும், அவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. அவரை கருணாநிதி என்று பெயரை சொன்னால் அப்பா உடனே எங்களின் தலையில் அடிப்பார். அதனால் அவரை நாங்கள் எப்பொழுதுமே பெரியப்பா என்றே அழைத்து வந்தோம்.
புகைப்படம்
என் தந்தையின் திருமணத்தின்போது பெரியப்பா தான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தார். திருமணத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாங்கள் பொக்கிஷமாக வைத்துள்ளோம். அந்த புகைப்படத்தில் பெரியப்பா, எம்.ஜி.ஆர். சார், கண்ணதாசன் சார், தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் ஆகியோர் உள்ளனர்.
நட்பு
பெரியப்பாவுடனான நாட்கள் குறித்து அப்பா அடிக்கடி பேசுவார். அரசியல் விஷயத்தில் மாற்றுக் கருத்து இருந்தாலும் எங்கள் அன்பு மாறாது என்று பெரியப்பாவும் கூறுவார்.
தமிழ்
எப்படி சிவாஜி அப்பாவை மிஸ் பண்ணுகிறோமோ அதே போன்று கலைஞர் பெரியப்பாவையும் மிஸ் பண்ணுவோம். அப்பாவும், பெரியப்பாவும் நம்முடன் தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தமிழ் வாழும் வரை அவரின் நினைவும் வாழும் என்றார் பிரபு.