Just In
- 7 min ago
இப்போதான் ஹேப்பி.. சொந்த உழைப்பில் 4 பெட்ரூம் வீடு.. பல வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை!
- 23 min ago
பிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்!
- 55 min ago
பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
- 1 hr ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
Don't Miss!
- News
தலைநகர் டெல்லியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம்... மூன்று பெண்கள் உள்பட 5 பேர் அதிரடி கைது!
- Sports
மைதானத்துல தான் ஆக்ரோஷமா இருப்பாரு... வெளியில அப்படி ஒரு பணிவு... ஜோஷ் பிலிப் பாராட்டு
- Finance
Budget 2021.. ஹெல்த்கேர் துறையில் ஒதுக்கீடு 40% வரை அதிகரிக்கலாம்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரபல தயாரிப்பாளர் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார்: நடிகை பரபரப்பு புகார்

கேன்ஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்த தன்னை தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை ஏசியா அர்ஜென்டோ தெரிவித்துள்ளார்.
இத்தாலியை சேர்ந்த நடிகை ஏசியா அர்ஜென்டோ பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் நடந்த திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது,

கேன்ஸ்
இதே கேன்ஸ் நகரில் 1997ம் ஆண்டு தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது எனக்கு 21 வயது. இந்த திரைப்பட விழாவில் தான் அவர் நடிகைகளை தேடிப் பிடித்து கை வைப்பார்.

மிரட்டல்
ஹோட்டல் அறையில் வைத்து என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார். என்னால் அவரை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. இனி அவரால் இந்த திரைப்பட விழாவுக்கு வர முடியாது. யாரும் அவரை வரவேற்க மாட்டார்கள்.

சினிமா
இனி வெயின்ஸ்டீன் அவமானத்தில் வாழ வேண்டியது தான். எந்த சினிமா உலகம் அவரை கொண்டாடி, அவரின் குற்றங்களை மறைத்ததோ அதே உலகம் தற்போது அவரை தவிர்த்து வருகிறது என்றார் ஏசியா.

துவக்கம்
அடுத்த 5 ஆண்டுகளில் வெயின்ஸ்டீன் கூறியபடி எல்லாம் நடக்க வேண்டியதாகிவிட்டது. இல்லை என்றால் அவர் என் சினிமா கெரியரை நாசமாக்கிவிடுவார் என்று பயந்தேன். பலாத்காரம் செய்த அன்றே அவர் ஜெயித்துவிட்டார் என்று ஏசியா அர்ஜென்டோ முன்னதாக செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

விளக்கம்
வெயின்ஸ்டீனின் இத்தாலி வழக்கறிஞர் பிலோமினா குசானோ கூறும்போது, ஏசியா அர்ஜென்டோ கூறிய புகாரில் உண்மை இல்லை. அவர் விருப்பப்பட்டு தான் வெயின்ஸ்டீனுடன் உறவு கொண்டார். அதன் பிறகு அவர் வெயின்ஸ்டீனின் பி. மங்கீ படத்தில் நடித்தார் என்றார்.