Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
படப்பிடிப்பு தளத்துக்கே சென்று ரஜினியை சந்தித்த அமைச்சர்... ஏன் தெரியுமா?
மேற்கு வங்க அமைச்சர் டார்ஜிலிங்கில் நடிகர் ரஜினியை சந்தித்தார்.
Recommended Video
சென்னை: மேற்கு வங்க சுற்றுலாத்துறை அமைச்சர் கவுதம் தெப், நடிகர் ரஜினிகாந்த்தை படப்பிடிப்பு தளத்துக்கு சென்று சந்தித்துள்ளார்.
காலாவைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். கலாநிதிமாறனின் சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், டெக்ராடூன் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சில நாட்கள் நடைபெறுகிறது.
காலா படம் ரிலீசாவதற்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுவிட்டார். தற்போது டார்ஜிலிங் அருகே உள்ள குர்சங் பகுதியில் படக்குழு முகாமிட்டுள்ளது.
அங்கு சில காட்சிகளை படம் பிடித்த பின்னர், டெக்ராடூனுக்கு செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது. ரஜினி நடிக்கும் முக்கிய காட்சிகள் அங்கு படமாக்கப்பட உள்ளன.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் கவுதம் தெப், டார்ஜிலிங்கில் ரஜினியை சந்தித்தார். முதல்வர் மம்தா பானர்ஜி சார்பில் ரஜினி சந்தித்து வாழ்த்து கூறியதாக அவர் தெரிவித்தார். படப்பிடிப்பு மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார்.