Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஐஸ்வர்யாவா, பரதத்திற்காக வாழ்வை அர்ப்பணித்தவர்கள் அல்லவா ஐ.நா.வில் ஆடியிருக்க வேண்டும்: முருகசங்கரி
சென்னை: ஐ. நா. சபையில் ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் ஆடியது சரியில்லை என்று பரதக் கலைஞர் முருகசங்கரி லியோ பிரபு மற்றும் கதக் நடன கலைஞர் ஸ்ரீதா பாஸ்கர் தெரிவித்துள்ளனர்.
மகளிர் தினத்தையொட்டி ஐ. நா. சபையில் நடந்த கொண்டாட்டத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினார். அவர் ஆடியது பரதக் கலைஞர்கள் பலரை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
மேலும் நெட்டிசன்கள் ஐஸ்வர்யாவை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.
ஜாம்பவான்கள்
ஜாம்பவான்கள் மற்றும் தேசிய அளவில் பிரபலமான பல கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் தான் அந்த அரங்கில் ஆடியிருக்க வேண்டும். ஷோபானா பிரபல நடிகையாக இருந்தாலும் அவர் சிறந்த நடன கலைஞர் என்பதை யாராலும் மறுக்க முடியாது என கதக் நடன கலைஞர் ஸ்ரீதா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா
நான் 14 ஆண்டுகளாக கிளாசிக்கல் நடன கலைஞராக உள்ளேன். ஐஸ்வர்யா ஒரு நடன கலைஞர் என்பதே எனக்கு அண்மையில் தான் தெரியும். அவரின் நடனம் சரியில்லை என்று ஸ்ரீதா மேலும் தெரிவித்துள்ளார்.
அதிகாரம்
எந்த துறையாக இருந்தாலும் அதிகாரம் மற்றும் பெரிய இடத்து ஆட்களை தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு பல வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு கலைஞர் அதிகாரம் உள்ளவராக இருந்தாலும் சிறந்தவராக இருந்தால் பரவாயில்லை என்று பரதநாட்டிய கலைஞரும், ஆய்வாளருமான முருகசங்கரி லியோ பிரபு கூறியுள்ளார்.
பரதம்
பரதம் சவாலான கலை. அதற்காக பலர் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ளனர். அப்பேர்பட்டவர்கள் தான் உலக அரங்கில் நடனமாட வேண்டும். திரையுலகில் பெரிய இடத்து வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிப்பது கங்கனா ரனாவத் கூட அண்மையில் தெரிவித்திருந்தார். அது இங்கு மட்டும் அல்ல உலக அளவில் நடைபெறுகிறது என நினைக்கிறேன் என்கிறார் முருகசங்கரி.