Don't Miss!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
Varmaa- கைவிடப்பட்ட வர்மா: பாலா என்ன சொல்கிறார்?
Recommended Video
சென்னை: வர்மா படம் கைவிடப்பட்டது குறித்து பாலா என்ன தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
விக்ரம் தனது மகன் த்ருவ் நடிகராக அறிமுகமாகும் படத்தை தனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்த பாலா தான் இயக்க வேண்டும் என்று விரும்பினார். அர்ஜுன் ரெட்டி படத்தை த்ருவை வைத்து வர்மா என்ற பெயரில் பாலா ரீமேக் செய்தார்.
இந்நிலையில் படத்தை வேறொரு இயக்குனரை வைத்து மீண்டும் எடுக்க உள்ளதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அர்ஜுன் ரெட்டி
படங்களை ரீமேக் செய்பவர் அல்ல பாலா. சொந்த கதையை படமாக்கும் அவரை விக்ரம் தான் ரீமேக் செய்ய வைத்திருக்கிறார். ரீமேக் எல்லாம் முடியாது என் ஸ்டைலில் படம் எடுப்பேன் என்று கூறித் தான் பாலா வர்மா வேலையை துவங்கியிருக்கிறார்.
பாலா
வர்மா படத்தை எடுத்து முடிக்கும் வரை சும்மா இருந்துவிட்டு தற்போது அதை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது பாலாவை கோபம் அடைய செய்துள்ளதாம்.
விக்ரம்
அப்படியே ரீமேக் செய்ய மாட்டேன் என்று சொல்லித் தானே படத்தை இயக்கினேன். தற்போது படம் சரியாக வரவில்லை என்று கூறி டிராப் செய்துள்ளார்களே. தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டு இந்த விக்ரமும் இப்படி பண்ணிவிட்டாரே என்று பாலா குமுறிக் கொண்டிருக்கிறாராம்.
திரையுலகம்
வாரிசு நடிகராகவே இருந்தாலும் முதல் படம் என்பது மிகவும் முக்கியம். இந்நிலையில் த்ருவின் முதல் படமே இப்படி பிரச்சனையில் சிக்கியதை பார்த்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோடம்பாக்கத்தில் இது பற்றி தான் பேச்சாக உள்ளது.