இயக்குனர் பாலா கழுத்தில் கிடக்கும் 108 பேரின் முதுகெலும்பால் செய்த மாலை
சென்னை: இயக்குனர் பாலா கழுத்தில் கிடக்கும் மாலை 108 பேரின் முதுகெலும்பில் செய்ததாம்.
இயக்குனர் பாலா நடிகை சங்கீதா நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த மாலையை பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறுகையில்,
வாரனாசியில் உள்ள சாமியார்கள் இதை எனக்கு பரிசாக அளித்தனர். இந்த மாலை இறந்துபோன 108 பேரின் முதுகு எலும்பில் செய்யப்பட்டது என்றார்.
அந்த நிகழ்ச்சியில் அஜீத் குறித்த பேச்சு வந்தது. அஜீத்தை அடிக்க தான் ஆள் அனுப்பியதாகவும், அவரை தான் திட்டியதாகவும் வந்த செய்திகளில் உண்மை இல்லை என்றார் பாலா. மேலும் மிஸ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை அவர் பாராட்டினார்.


Click it and Unblock the Notifications











