Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தீபிகாவுக்கு வருங்கால கணவரிடம் எந்த விஷயம் பிடித்திருக்கு என்று பாருங்க!
Recommended Video
மும்பை: வருங்கால கணவரான ரன்வீர் சிங்கிடம் என்ன பிடிக்கும் என்று நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ராம் லீலா படத்தில் நடித்தபோது ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் காதலில் விழுந்தனர். 2013ம் ஆண்டில் இருந்து காதலித்து வரும் அவர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.
அவர்களின் காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
திருமணம்
ரன்வீர் சிங், தீபிகாவின் திருமணம் வரும் நவம்பர் மாதம் நடக்கும் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்காக நகை, உடைகள் வாங்க தீபிகா லண்டனுக்கு சென்று வந்துள்ளார்.
காதல்
தீபிகாவை காதலிப்பதாக ரன்வீர் சிங் பலமுறை தெரிவித்துள்ளார். ஆனால் தீபிகா காதல் பற்றி பேசியதே இல்லை. தான் ரன்வீரை காதலிப்பதை தற்போது தான் முதல் முறையாக தீபிகா ஒப்புக் கொண்டுள்ளார்.
ரன்வீர்
ரன்வீர் சிங்கிடம் தனக்கு என்ன பிடிக்கும் என்று தீபிகா தெரிவித்துள்ளார். இது குறித்து தீபிகா கூறியதாவது,ரன்வீர் ரொம்ப நல்ல மனிதர். அனைவரிடமும் அன்பாக இருப்பார். அழுவதற்கு பயப்படாத ஆள். அது தான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தது. அவர் தான் என் பெஸ்ட் பிரெண்ட்.
அவர் ஒருபோதும் என் மனதை காயப்படுத்த மாட்டார் என்பது எனக்கு தெரியும் என்றார்.
தீபிகா
தீபிகா தற்போது புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் அதிகமாக சம்பளம் கேட்பதாலும், ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரம் கேட்பதாலும் அவரை ஒப்பந்தம் செய்ய பல தயாரிப்பாளர்கள் முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.